Friday 14 October 2011

உங்க WEBCAM ஜாக்கிரதை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


Posted: 09 Oct 2011 09:32 AM PDT
இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது
 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :
1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  
2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 
3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.
       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 
    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன்.  

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது
டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் : 
1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  
3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       
உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


         
சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .
இதில் இருந்து தப்பிக்க : 

1.
நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 

2.
நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது . 



என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]

Saturday 1 October 2011

அ.தி.மு.க இந்துத்துவாக்களின் மெய்யான நேசசக்தி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 

ஆமதா பாத்தில் உண்ணா விரதம் இருந்த இந்துத்துவா சக்தி களின் சின்னம் நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. எம்.பி.க் கள் மாலை அணி வித்தனர். அந்தப் புனிதரின் மூன்று நாள் உண்ணா விரதத்திலும் பங்கு கொண்டு வாழ்த்தினர்.
அய்யாவின் பெய ரைச் சொல்லாது அண் ணாவின் நாமத்தை உச்ச ரிக்காது இங்கே திராவிட இயக்க அரசியல் நடத்த முடியாது. ஆகவே வெண்தாடி வேந்தனின் சிலைக்கு ஒரு மாலை.
அதே சமயத்தில் இன்றைய அ.தி.மு.க. என் பது இந்துத்துவாக்களின் மெய்யான நேச சக்தி என்பதனை இந்தியாவிற்கு எடுத்துக்காட்ட ஆமதா பாத் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு.
நேசிப்பை வைத்து அரசியல் நடத்த முடியாது. வெறுப்பை விதைத்து தான் இந்துத்துவா அர சியலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ப தற்கு எடுத்துக்காட்டு நரேந்திர மோடிதான். 2002-ஆம் ஆண்டு அவ ருடைய ஆசியோடு சிறுபான்மை இன மக்கள் மூவாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ரொட்டி சுட விறகை எரிப்பதற்குப் பதிலாக இஸ்லாமிய இளைஞர்கள் பத்து பேர்களைக் கட்டி பேக்கரி அடுப்பில் போட்டு எரித்தனர். தாய்மையுற்ற இஸ்லாமிய சகோதரிகளின் வயிறுகள் கிழிக்கப்பட்டன. கண் திறக்காத பிஞ்சுக் குழந்தைகளை எடுத்து சூலாயுதத்தில் குத்தி இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடின.
நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் குடியிருப்புகள் லங்கா தகனம் செய்யப்பட்டன. உங்கள் விருப்பம்போல சிறுபான்மை இன மக்களை வேட்டையாடிக்கொள்ளுங்கள் என்று இந்துத்துவா சக்திகளுக்கு நரேந்திர மோடி ஒருநாள் சுதந்திரம் அளித்தார். அந்த அநீதி அக்கிரமங்கள் அனைத்தும் விசாரணையில் அம்பலத்திற்கு வந்தன. இன்றைக்கும் அங்கே சிறுபான்மை மக்கள் அச்சத்தில்தான் வாழ்கிறார்கள்.
2002-ஆம் ஆண்டு இந்துத்துவா சக்திகள் நடத்திய மனிதப்  படுகொலைகள் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடுதான்  அரங்கேறின என்பதனை காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் அம்பலப்            படுத்தினார். அதனால் அவர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.           அதனை எதிர்த்து இப்போது அவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக்      கிறார்.
காவித் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் சிறுபான்மை மக்களைப் பலி கொண்டார்கள்- அதனைத் தடுக்க முடியாமல் எப்படியெல்லாம் தங்கள் கரங்கள் கட்டப்பட்டன என்பதனை சஞ்சீவ் பட், ராகுல் சர்மா, ராஜ்னிஷ்ராஜ் ஆகிய ஐ.பி.எஸ். காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் என்று சித்தரிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இப்படி ரத்தக்குளியல் நடத்திய நரேந்திர மோடி இன்றைக்குக் குற்றமற்றவராக ஆகிவிட் டாராம். அதனால் அவருக்கு அத்வானி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களும் வாழ்த்துக் கூறினர். அவர்களோடு அ.தி.மு.க., அகாலிதள நேச சக்தித் தலைவர்களும் மலர்க்கிரீடம் அணிவித்தனர். ஆமாம்! இன்றைக்கும் மனித வாடை வீசும் மோடி எப்படி புனிதரானாராம்?
 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட இந்துத்துவா வெறியாட்டத்தின்போது நாடாளு மன்ற காங்கிரஸ் உறுப்பினர் இஹ்சான் ஜாப்ரி உயிரோடு கொளுத்தப்பட்டார். டயரைக் கொளுத்தி அதனை அவருடைய கழுத்தில் மாட்டிக் கொடூர மாகக் கொலை செய்தார்கள். நரேந்திர மோடி ஆட்சியில் நரவேட்டை எத்தகைய உச்சத்தை எட்டியது என்பதற்கு இந்த மாபாதகச் செயலே எடுத்துக்காட் டாகும். அந்த அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சி அசுரத்தனமான ஆட்சியாக இருந்தது.

தனது கணவரின் படுகொலைக்கு குஜராத்தில் நீதி கிடைக்காது என்று உயிரோடு எரிக்கப்பட்ட இஹ்சான் ஜாப்ரியின் துணைவியார் டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
அந்த நீதிமன்றம் என்ன சொன்னது?
நரேந்திர மோடி தும்பைப் பூப்போன்று தூய்மையானவர் என்றா தீர்ப்பளித்தது? அல்லது அவர் ரத்தவாடை காணாத சன்மார்க்க சொரூபி என்றா தீர்ப்பளித்தது? இல்லை.
"அம்மா, நாங்கள் கீழ் நீதிமன்றத்தின் உரிமை யை எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே முதலில் ஆமதாபாத் விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். அதன் பின்னர் அவசியம் என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுங்கள்' என்றுதான் தீர்ப் பளித்தது.
இதனைத்தான் நரேந்திரமோடிக்கு வெற்றி வெற்றி என்று பி.ஜே.பி. பெரும் டமாரம் அடித்தது. செய்திப் பஞ்சத்தில் அடிபட்டிருக்கும் தொலைக் காட்சிகளும் ஏடுகளும் ஆடம்பர அமர்க்களமாக அந்தச் செய்தியைத்தான் சீவி சிங்காரித்து வெளியிட்டன.


 சோலை
நரேந்திர மோடி சும்மா இருப் பாரா? அவர் அகில இந்திய அரசியலில் குதிக்கக் காத்துக்கொண்டிருப்பவர். எனவே மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் என்று ஆமதாபாத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
விடிந்தால் எத்தனை கோழிகள் கிடைக்கும் என்று உறக்கத்தில் நரி எண்ணிக்கொண்டி ருக்குமாம். அதேபோல டெல்லி அரியணையில் அமர இன்னும் எவ்வளவு காலம் என்று நரேந்திர மோடி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்த குளுகுளு மண்டபத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் 2002-ஆம் ஆண்டு கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "அன்றைய கலவரங் களில் சொத்து சுகங்களை இழந்த எங்களுக்கு இன்றுவரை எந்த விடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் குஜராத்தில் அமைதி காக்க உண்ணாவிரதம் என்று நரேந்திர மோடி நாடகம் ஆட வேண்டாம்' என்று அவர்கள் முழக்க மிட்டனர். பாதிக்கப்பட்டு பரிதவித்த மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களை நரேந்திர மோடி எப்படியெல்லாம் விலை கொடுத்து வாங்க முயற்சித்தார் என்பதனை சமூக ஆர்வலர்கள் அம்பலப்படுத்தினர். அவர்கள் கைது செய்யப் பட்டனர்.
உயிரோடு கொளுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் துணைவியார் ஏன் உச்சநீதி மன்றத்தை நாடினார்?
நரேந்திர மோடிக்கு எதிராக பி.ஜே.பி.யி லேயே உருவான இன்னொரு தலைவர் ஹரேன் பாண்டியா. நியாயமாக அவர்தான் குஜராத் முதல்வராக முடி சூடியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார்.
நடைபயிற்சிக்குக் காலையில் சென்ற அவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்குக் காரணம் நரேந்திர மோடிதான் என்று இன்றைக்கும் ஹரேன் பாண்டியாவின் துணைவியார் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார்.
ஹரேன் பாண்டியா படுகொலை வழக்கு ஆமதாபாத் விசாரணை மன்றத்தில் நடை பெற்றது. குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று அனைவரும் விடுதலை செய்யப்          பட்டனர்.
உள்துறை அமைச்சரின் படுகொலைக்குத் தண்டனை வாங்கித் தரமுடியாத மோடியிடம் தாங்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று கொலையுண்ட நாடாளுமன்ற உறுப்பினரின் துணைவியார் கேட்கிறார். அதனால்தான் அன்றே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
தற்போது மோடி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் பங்கேற்க ஹரேன் பாண்டியாவின் துணைவியாரை அழைத்தனர். அவர் மறுத்துவிட்டார். தான் நிரபராதி என்பதனை நிரூபிக்க இப்படி நரேந்திர மோடி படாதபாடு படுகிறார். ஆனால் நியாயங்கள் அவருக்கு கை கொடுக்க மறுக்கின்றன.
செல்வி ஜெயலலிதா ஒளிவு மறைவற்ற அரசியல் தலைவர். தனக்குச் சரி என்று பட்டதைத் துணிச்சலாகச் சொல்லுவார்.  அவருடைய அரசியல் பயணத்தை அறிந்தவர்கள் அந்த உண்மையை அறிவார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வரவேற்று தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்திலேயே முழங்கியவர் செல்வி ஜெயலலிதா. எங்களால்கூட இடிப்பிற்கு ஆதரவாக இவ்வளவு வலிமையாக வாதாட முடியாது என்று அத்வானி பாராட்டினார். அப்போதே அ.தி.மு.கழகம் தங்கள் நேச சக்தி என்பதனை இந்துத்துவா சக்திகள் அறிந்துகொண்டன. அம்மாவின் ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆசிர்வாதம் வழங்கியது.
ராமருக்கு எங்கே கோயில் கட்டுவது என்று விவாதம் எழுந்தபோதும் செல்வி ஜெயலலிதா தமது கருத்தை தெளிவாகச் சொன்னார். இடிக்கப்பட்ட பாபர் மசூதி அருகே ராமருக்கு கோயில் கட்டாமல் இத்தாலியிலா கட்டுவார்கள் என்று கேட்டார்.
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களே கொண்டுவரத் தயங்கிய ஒரு சட்டத்தை அவர் அவசர சட்டமாகவே கொண்டுவந்தார். அதுதான் மதமாற்றத் தடைச் சட்டமாகும். அந்தச் சட்டத்தினை உடனடியாக பி.ஜே.பி. சங்பரிவாரங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றன.

அப்போது தேவாலயங்களைக் கொளுத்துவது, பாதிரியார்களை உயிரோடு எரிப்பது போன்ற காரியங்             களில் அந்தப் பரிவாரங்கள் ஆனந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

இந்து ஆலயங்களில் அன்னதான திட்டத்தை அப்போதே அவர் துவக்கினார். இப்போது அந்த திட்டத்தை விரிவுபடுத்தி நிறைவு செய்துகொண்டிருக்கிறார்.
சிறுபான்மை இன மக்கள் மூவாயிரம் பேர்களை பலிகொண்டு அதன்பின்னர் நரேந்திர மோடி முதல்வராக முடி சூட்டிக்கொண்டார். அவருடைய முடிசூட்டு விழாவில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் முடிசூட்டு விழா விற்கு நரேந்திர மோடி வருகை  தந்ததும் பசுமையாக இருக்கும்.  இவைகளெல்லாம் தற்செயலான நட்புறவான நடவடிக்கைகள் அல்ல, இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் உருவாகிற அரசியல் உறவுகளாகும். சுருங்கச் சொன்னால் அமரர் எம்.ஜி. ஆருக்குப் பின்னர் திராவிட இயக்க அரசியல் என்பது தீய்ந்து போய் விட்டது.
அதன்பின்னர் அ.தி.மு.கழகம் என்பது இந்துத்துவா அடித்தளத்திலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமது அரசியல் நிலையில் எப்போதும் தெளிவாகவும் இருக்கிறார். உறுதி யாகவும் இருக்கிறார்.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பி.ஜே.பி. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவானால் அதற்கு ஆதரவு தேவைப்பட்டால் அதற்கு அ.தி.மு.க. துணை நிற்கும். ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்தபோது அதன் அமைச்சரவையிலேயே அ.தி. மு.க. அங்கம் பெற்றது.
இந்தியாவின் பிரதமராக சோனியாவோ, ராகுலோ அரியணை ஏறுவதை இந்துத்துவா சக்திகள் விரும் பாது. அதனைவிட அ.தி.மு.க. விரும் பாது. எனவே அகில இந்திய அரசிய லில் இந்துத்துவா சக்திகள்தான் அ.தி.மு.க.வின் நேச சக்தியாக இயல் பாய் இருக்க முடியும்.