Wednesday 18 May 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு
கடந்த மே மாதம் 13, 2011 – தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத ஒரு நாள் என்றால் அது மிகையில்லை. பணபலம், மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குகள், மீடியா பலம், அரசு பணியார்களின் ஒட்டுமொத்த ஆதரவு என்று அசுர பலத்துடன் காட்சியளித்த திராவிட முன்னேற்றக்கழத்தின் ஆட்சியை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிய நாள். தமிழகம் ஒளிர்கிறது என்று திரு.கருணாநிதி அவர்கள் என்னாதான் கூப்பாடு போட்டாலும் அவரது கட்சியினர் செய்த அராஜகங்கள், ஊழல்கள், விலைவாசி உயர்வு, மின்வெட்டு என்று மக்களை பாதித்த விஷயங்களுக்காக மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர் என்பதே உண்மை.
இதில் முஸ்லிம் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரின் தன்னலம் கருதாத உழைப்பு கூட்டணி கட்சியினரே பாராட்டும் அளவுக்கு இருந்துள்ளது என்பதை எவரும் மறக்கவியலாது.
அராஜகத்தையும் வன்முறையையும் ஒழித்து சட்ட ஒழுங்கை சரிவர நிலைநாட்ட வேண்டும், ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டும் என்பதற்காகவுமே கட்சி, மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பு மக்களும் அதிமுக அணிக்கு வாக்களித்து இமாலய வெற்றியை அளித்துள்ளனர் என்பதை  மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அம்மையார் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த காலங்களில் ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் வாழ்க்கை திரு. கருணாநிதிக்கு மாற்று உருவமாகத்தான் இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. திமுக 5 ஆண்டுகள் பதவியேற்று  தங்கள் வியாபாரத்தை நடத்தும் என்றால் அடுத்துவரும் அதிமுக வும் அதே பாணியில் மக்களை சுரண்டி ஊழலை நடத்தும் என்ற நிலைதான் இதுவரை இருந்துள்ளது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவ்விஷயத்தில் ஒத்த நிலையில்தான் இருந்துள்ளனர். எனவே இந்நிலையிலிருந்து  ஜெயலலிதா அம்மையார் இந்தமுறை மாறியாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமது பதிவயேற்பு நிகழ்ச்சிக்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையாளன் நரேந்திர மோடியை அழைத்துள்ளது தமிழக மக்களில் நடுநிலையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. ஜெயலிதா அம்மையார் தான் பழையபடி நரேந்திர மோடியின் அன்புச் சகோதரியாகத்தான் இருப்பேன் என்ற நிலையை எடுத்தால், இன்று கருணாநிதியும் அவருடைய கட்சியும் எந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோ இதைவிட மோசமானதொரு நிலையை வருங்காலத்தில் அதிமுக நிச்சயமாக அடையநேரிடும் என்பதை ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம். 
சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு எத்தனையோ தகுதிமிக்க பிரமுகர்கள் நாட்டில் இருந்தும் நரேந்திரமோடியை அழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒருவேளை ஜெயலலிதா அம்மையாரின் இந்த முடிவிற்கு குருமூர்த்தி, துக்ளக் சோ போன்ற பார்ப்பன துவேஷக்காரர்களின் திட்டமிட்ட சதியாக இருக்கமோ என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
முதலில் சங்பரிவார தீயசத்தியான நரேந்திரமோடி யார் என்பதை ஜெயலலிதா அம்மையார் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்

குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் அவரது நேரடி கட்டளையின் பேரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின்  கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.

குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவற்றை ஜெயலலிதா மறந்தாலும் மறக்கலாம் ஆனால் முஸ்லிம்கள் எவரும் மறக்க தயாரில்லை.
கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்த நரேந்திர மோடி என்ற பயங்கரவாதிக்கு அம்மையார் இனியும் முக்கியத்துவம் கொடுத்தால் தமிழக மக்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே தக்க பாடத்தை அளித்துவிடுவார்கள் என்தை ஜெயலலிதா கவனத்தில் கொள்ளட்டும்.

இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடு சங்பரிவாரங்கள், நரந்திர மோடியின் கூலிப்படையினர் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று ஜெயலலிதா அம்மையாருக்கு விளங்காதா? இவ்வாறு நரந்திர மோடியின் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.


இவ்வாறு இந்தியத்திருநாடு நரந்திர மோடியின் இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை ஜெயலலிதா அழைப்பது முறைதானா? மோடியின் வகையறாக்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.


கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக ஜெயலிலதா இருந்தால் மோடியும் ஜெயலிலதாவும் சமமானவர்கள்தான் என்ற நிலையாட்டை தமிழக முஸ்லிம்கள் எடுக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இனி பிஜேபி யுடன் எக்காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடந்த 1997ல் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்துள்ள ஜெயலலிதா அவர்கள் மேற்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். தமது கட்சியின் இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்கள், மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் முக்கியமா அல்லது நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த சங்பரிவார பிஜேபி முக்கியமா என்பதை ஜெயலலிதா அம்மையார்தான் முடிவெடுக்க வேண்டும். 

-- 
நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

Monday 16 May 2011

தரையிலும், தண்ணீரிலும் இலகுவாக தனது பயணத்தை மேற்கொள்ளும் பேருந்து

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பறக்கும் கப்பல் (ராட்சத விமானம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
விந்தை மனிதன், விந்தை உலகம். ஏதாவது புதினம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தினமும் போராடும் மனிதன். மனிதனின் விடாமுயற்சி எதையும் விட்டுவைப்பதில்லை. கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சிகளும் ஒன்று முடிந்தால் மற்றொன்று ஆரம்பமாகிறது.
இப்படித்தான் பறக்கும் இரயில், மிதக்கும் உலகம், மிதக்கும் விமான நிலையம் என ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.
புதிய கண்டுபிடிப்புகளில் சமீபத்தியது ராட்சத விமானம். அதற்கு அடுத்தபடியாக இப்போது பறக்கும் கப்பல் அல்லது பறக்கும் நகரமே வந்துவிட்டது.
கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் கற்பனையாக வடித்தது எல்லாம் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மாஎன்ற திரைப்பட பாடலின் கற்பனை எண்ணங்களை நிஜமாக்கியிருக்கின்றது இன்றைய விஞ்ஞானம்.
ஆகாயத்திலேயே பறக்கின்றோம் என்ற உணர்வே இல்லாதவாறு சொகுசை அனுபவித்த படி பயணம் செய்ய இன்றைய அறிவியல் தொழில் நுட்பங்கள் நமக்கு உதவுகின்றன.
இனி விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றங்கள், பாட்டுக் கச்சேரிகள், அரசியல் பொதுக் கூட்டங்கள் இவையெல்லாம் விமானத்திலேயே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விமானம் கண்டுபிடித்த காலத்தில் ஆகாயத்தில் பறக்க முடியுமா? என்று கேள்வி கேட்ட மனிதனுக்கு மிதக்கவே முடியும் என்று விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது. அது நிரூபிக்கப்பட்டும் வருகிறது.
சீட் பெல்ட்போட்டு இருக்கையில் அமர்ந்து விமானத்தில் பறந்த காலம் போய் விமானத்தின் உள்ளேயே நாம் ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைத்தபடி உல்லாசமாக பறக்கலாம். உள்ளேயே உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அறைகள்எல்லாம் பறந்து கொண்டே.
இவையெல்லாம் எங்கு என்று கேட்கின்றீர்களா? உருவாகிக் கொண்டிருக்கும் பறக்கும் சொகுசுக் கப்பலில் தான் இத்தனை வசதிகளும் இருக்கிறது. அது பற்றி இந்த வாரம் அறிவியல் அதிசயம் பகுதியில் காண்போம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வோர்ல்ட் வைட் ஏரோஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் இந்த பறக்கும் கப்பலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகிலேயே விமானம் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவம், தனி நபருக்கான விமானம், சொகுசு விமானம் என்று பல நவீன ரக விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
தற்போது தயாராகி வரும் பறக்கும் சொகுசு கப்பல் பறக்கும் குயின் மேரி-2′  என்று வர்ணிக்கிறார்கள். அதாவது தற்பொழுது உலகிலேயே பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக குயின் மேரி-2′ உள்ளது இந்த கப்பல் பறந்தால் எப்படியிருக்குமோ அது போல இந்த நவீன விமானம் இருக்கும் என்பதால் இது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.
மோபி ஏர்என்று பெயரிடப்பட்டுள்ள இதனுடைய அளவு என்ன தெரியுமா? சுமார் ஒரு ஏக்கர். அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இது சமமானது.
இதனுடைய உயரம் 165 அடி. அதாவது சுமார் 8 மாடிக்கட்டிடம் உயரம் கொண்டது. அகலம் 244 அடி, நீளம் 647 அடி கொண்டது. 6ஆயிரம் மைல் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 250 பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை அனுபவித்தபடி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இக்கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இகோர் பாஸ்டர்னாக் கூறுகையில், “பயணிகள் கப்பலை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இப்பெரிய விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பறக்கும் (கப்பல்) விமானம் மணிக்கு 174 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 18 மணி நேரத்தில் அமெரிக்காவையே வலம் வந்துவிடும்என்கிறார்.
8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே பயணிகள் முக்கிய நகரங்களையும், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களையும், புகழ்பெற்ற வானுயர்ந்த கட்டிடங்களையும் கண்டுகளிக்கலாம்.
மேலும் விமானத்தின் உள்ளேயே சொகுசு விருந்தினர்கள் அறைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முதலியவை இருக்கும். இதில் பயணம் செய்யும் போது ஒரு உல்லாசக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும். இதனுடைய இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மெகா விமானம் ஹெலிகாப்டர் போலவே செங்குத்தாக மேலெழும்பவும், கீழிறங்கவும் கூடியது. இது புறப்பட ஓடுதளம் தேவையில்லை.
உள்ளே இருக்கும் பயணிகளுக்கு விமானம் பறக்கும் சப்தம் கேட்காத வகையில் உந்து சக்தி இயந்திரங்கள் விமானத்தின் பின் புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் பறக்க ஹைட்ரஜன் எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளே பயணிகளின் நடமாட்டம் மற்றும் விமானத்தின் வெளிப்புற சீதோஷ்ணம் மற்றும் அழுத்தம் இவைகளை ஈடுகட்டும் விதமாக நவீன தொழில் நுட்பத்துடன் மிதவை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும்போது விமானத்தின் எடையை சமாளிக்கும் விதமாக இதனுடைய தானியங்கி முறைகள் மூலம் வெளிப்புறத்திலிருந்து காற்றை உள்வாங்கி அதற்கேற்ப சுருக்கி விமானம் முழுவதும் கொடுக்கிறது. மேலும் இந்த விமானத்தை அவசர காலத்தில் பனிக்கட்டி நிறைந்த தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்க முடியும்.
அரிய கண்டுபிடிப்புகள், சாதனைகள், வியப்பூட்டும், பிரமிக்க வைக்கும், அதிசயக்க வைக்கும் ஆராய்ச்சிகள் என்று நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
இன்றைய கற்பனைக் கனவுகள் நாளை நிஜமாகி விடுகிறது. இன்றைய அதிசயங்களை நாளைய முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் இயல்பாக்கிவிடுகின்றன.
கனவு காணுங்கள்என்று நம் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சொன்னது சாதாரண வார்த்தை அல்ல. நாளைய விஞ்ஞானிகளை உருவாக்கும் மந்திர சொல் இது என்றே சொல்லலாம். மாயாஜாலம் போன்ற கற்பனைகளை நிஜத்திற்கு கொண்டு வரும் ஒரு கருவி. நேற்று கற்பனை செய்த இந்த பறக்கும் விந்தைகளெல் லாம் இன்று அரிய சாதனை. நாளை என்னென்ன வரப் போகிறதோ? எதிர்பார்ப்போம்!

Wednesday 11 May 2011

துபாயில் இந்திய கன்சல் ஜெனரல் பங்கேற்ற ரத்ததான முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான்) மற்றும் துபாய் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து துபாய் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அல் வாஸல் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாமினை 06.05.2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெகு சிறப்புற நடத்தியது.
துபாய் ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் அவசர உதவிக்கு செய்யப்படும் ரத்ததானம் செய்வதற்கு முன்வந்திருப்பவர்கள் குறித்து மிகவும் பெரிமிதம் தெரிவித்தார். இதுபோன்ற சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க அங்கத்தினர்களைப் பாராட்டினார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் முன்னிலை வகித்தார். ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்றார்.
ரத்ததான முகாமினை இந்திய கன்சல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து முதலாவதாக தானும் ரத்ததானம் செய்தார். மேலும் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.
ரத்ததான முகாமில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவரும், நேபாளம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும் ஆண், பெண் என்ற பேதமின்றி ரத்ததானம் வழங்க முன்வந்திருந்தனர்.
ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். ஈமான் மற்றும் துபாய் தமிழ்ச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் ஆர்வமுடன் பணியாற்றினர்.
நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும இயக்குநர் அஹமது சலாஹுத்தீன், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், மேலாளர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்விறகான அணுசரனையினை அல் ரவாபி, அல் அய்ன் வாட்டர், அல்கபே, மூன் டிவி, சிவ் ஸ்டார் பவன், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
MUDUVAI HIDAYATH

Tuesday 10 May 2011

கோடையில் தோல் நோயிலிருந்து தப்ப அதிகமா தண்ணீர் குடிங்க

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


கத்திரி வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன
இதற்குக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதினால்தான் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
அல்ட்ரா வயலட் கதிர்கள் 
சூரிய ஒளியில் உள்ள, மனிதரின் கண்களுக்கு புலப்படாத அல்ட்ரா வயலட்கதிர்கள் தான் உடலில் வைட்டமின் டிஉண்டாக உதவுகிறது. இதனால் தான் காலை வெய்யில் உடலுக்கு நல்லது என்கிறார்கள். இருப்பினும் தோல் பாதிப்பிற்கு காரணம் இந்த கதிர்கள்தான். அதிக அளவில், அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கினால் உடலின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு, தோல் திசுக்கள் உற்பத்தி செய்யும் இராசயன பொருட்கள் மாறுபடுகின்றன.
இந்த அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஃபோலிக் அமிலத்தை சிதைத்து அதன் குறைவை எற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்க சருமம் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சருமத்தின் மேல்பகுதி கடினமாகி யு.வி. கதிர்கள் ஊடுருவாமல் தடுக்கின்றது. மெலானின்’ (தோல் நிறத்தை கொடுக்கும் பொருள்) உற்பத்தி அதிகமாவதால் தோலின் நிறமும் அதிக கருமையாகிறது.
தோல் புற்றுநோய்
ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணமான திகழ்வது மெலானின் எனப்படும் நிறச்சத்து. இதற்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்றுநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மருத்துவர்கள் ஆலோசனை
வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.
வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது.
சத்தான உணவு உண்ணலாம்
சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் தூசியினால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும். காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும்.
மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான வெயிலில் மஞ்சள் பூசிச் செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, ஆகியவற்றை குறைத்துக்கொள்வதும் வெப்பத்தின் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளாம்.

Visit: www.mohamedbunder.tk

Monday 9 May 2011

சோகத் தடங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பரங்கிப்பேட்டை வத்தக்கரையில் இன்று நன்பகல் 12 மணிக்கு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுபள்ளது. விற்பனைக்கும் ஏற்றுமதிக்கும் வைத்திருந்த வகை வகையான மீன்களும், 800 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்டோரேஜ்களும் தீக்கிரையாயின. சுமார் 15 மீன் விற்பனை நிறுவனங்கள் முற்றிலும் எரிந்து சுவர்கள் மட்டும் மிச்சமுள்ளன. இந்த மாபெரும் சோக நிகழ்வு விட்டுச் சென்ற தடங்கள் உங்களின் பார்வைக்கு....www.mypno.blogspot.com

Sunday 1 May 2011

பராஅத் இரவு ஓர் ஆய்வு

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் பராஅத் இரவுஎன்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் பராஅத் இரவுஎன்பதற்கு அரபியில் லைலத்துல் பராஅத்என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் பராஅத் நோன்புஎன்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.