Friday 7 August 2020

பாபர் மசூதி வழக்கை இண்டர்நேஷ்னல் கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்


அனுப்புநர்

முஜ்பில் அல் சுரேகா
வழக்கறிஞர்
குவைத்

பெறுநர்

தலைவர்
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
ஜாமியா நகர்
புது டெல்லி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

அரபுலக முஸ்லிம்களின் சார்பாக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். 
இரண்டு விஷயங்கள் எங்கள் மனதை காயப்படுத்தியுள்ளன.
ஒன்று அப்போதைய நரசிம்மாராவ் அரசு கண்டும் காணாமல் சட்டத்துக்குப் புறம்பாக பட்டப்பகலிலேயே இந்துத்துவ மதவெறியர்களால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சோகமான சம்பவம்.

இரண்டாவது இந்திய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு எதிராக,
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் வாரியமும் ,பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழுவின் தீவிரமில்லாத மிதமான அரை மனதுடன் கூடிய சட்ட நடவடிக்கை (defence)களும் 
வெற்றி பெற வேண்டிய சட்டப் போராட்டத்தில் தோல்வியை ஏற்படுத்தியதும்

இந்த பிரச்சனை இந்திய முஸ்லிம் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல உலகலாவிய மத மற்றும் மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்டது.

ஆகையினால் உங்கள் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற  முக்கிய உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் நடத்தி,

பாபர் மசூதி வழக்கை இண்டர்நேஷ்னல் கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எங்களிடம் வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

உங்களிடமிருந்து விரைவில் பதிலை எதிர்நோக்கியவனாக

வாழ்த்துக்கள்

Mujbil Al Shureka
Lawler
State of Kuwait

No comments:

Post a Comment