Friday 14 August 2020

நாவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.*

01- நாவை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.*
📘எவர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் இல்லாவிடில் மெளனமாக இருக்கட்டும். (ஹதீஸ்)
📘எவர் தனது இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ள மறுமஸ்தானத்தையும் பாவங்களை விட்டும் பாதுகாக்கின்றாரோ அவனுக்கு சுவர்கம் உறுதி (ஹதீஸ்)
*👉🏿02- தீரவிசாரனை செய்யாமல் முடிவெடுக்கக் கூடாது.*
📕ஒரு பாவி உங்களிடம் ஏதேனும் ஓர் செய்தியைக் கொண்டுவந்தால் அதனை தீரவிசாரணை செய்து தெளிவுபெற்றுக் கொள்ளுங்கள்.(குர்ஆன்)
*👉🏿03- பிறர் மனம் நோகும் படி முகத்தில் பேசக் கூடாது.*
📘தனது கழுத்தில் துணியைப் போட்டு தளும்புகள் பதியுமளவு இருக்கிய காட்டரபியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல் அவர்கள.(ஹதீஸ்)
📘பள்ளியில் சிறுநீர் கழித்தவனைக் கூட மனம் நோகாமல் அறிவுரை சொல்லி அனுப்பியவர்கள் நபி ஸல் அவர்கள். (ஹதீஸ்)
*👉🏿04- கேட்டதையெல்லாம் பரப்பிவிடக் கூடாது.*
📘நபி ஸல் அவர்கள் கூறினார்கள் எவன் ஒருவன் கேட்டதெயெல்லாம் பரப்பிவிடுகின்றானோ அவனே அவன் பொய்யன் என்பதற்கு அது போதுமானதாகும். (ஹதீஸ்)
*👉🏿05- ஒருவரைப் பற்றி புரம், கோல் பேசிடக் கூடாது.*
📕குறை கூறி புரப் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (குர்ஆன்)
📕அவர்களுக்கு குதமா எனும் நரக நெருப்பு காத்திருக்கிறது. (குர்ஆன்)
📘புரம் என்பது ஒருவனிடம் இருக்கும் ஒரு பண்பையோ அல்லது செயலையோ மூன்றாம் நபரிடம் சொல்லி ஆனந்தமடைவதும், பகைமையை தூண்டிவிடுவதுமாகும். (ஹதீஸ்)
*👉🏿06- அவசரப்பட்டு நிதானமிழந்து வார்தைகளை கொட்டிவிடக் கூடாது.*
📘பொருமை என்பது கோபத்தின் ஆரம்பத்தில் ஏற்பட வேண்டும். (ஹதீஸ்)
எப்படி போன நாளை அடைய முடியாதோ, கழிந்த நேரத்தை மீட்ட முடியாதோ, கரந்த பாலை மடியில் நுழைவிக்க முடியாதோ... அது போல் நாவால் கொட்டிய வார்தைகளை அல்லவும் முடியாது அழிக்கவும் முடியாது.
*👉🏿07- ஒற்றுமையையே எப்பொழுதும் விரும்புதல்.*
📕அல்லாஹ்வுடைய கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் பிர்ந்துவிடாதீர்ள். (குர்ஆன்)
📘குடும்ப உரவுகளை சேர்ந்து நடந்து கொள்ளுங்கள். (குர்ஆன்)
*📘எவன் இரத்த பந்த உறவுகளை துண்டித்து வாழ்கின்றானோ அவனுக்கு சுவனம் நுழைய முடியாது. (ஹதீஸ்)*


இவைகளை கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் எம்மை கேள்விகள் கேட்டு சீர்திருத்திக் கொண்டால் நாமே இம்மையிலும் மறுமையில் *வெற்றாயாளர்கள்.*

ஜஸாகல்லாஹு ஹைறன்.
--
Thanks & Regards

No comments:

Post a Comment