பாபர் மசூதி இடத்துக்கு மாற்றாக அயோத்தியில் 5 ஏக்கர் இடத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி உத்திர பிரதேச அரசு வழங்கியுள்ளது.
இதற்காக 15 பேர் கொண்ட குழுவை உத்திர பிரதேச வக்ப் வாரியம் அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க.
அந்த குழுவின் பெயர் இந்தோ இஸ்லாமிக் பவுண்டேசன். அந்த குழுவின் உறுப்பினர்கள் ஏகோபித்த முடிவின் படி அந்த ஐந்து ஏக்கர் இடத்தில் ஒரு மசூதி ,ஒரு மருத்துவமனை, ஒரு பொது நூலகம் மற்றும் ஒரு மியூசியம் அமைப்பதாக முடிவெடுத்துள்ளார்கள்.
இதன் பணிகள் கொரனா காலம் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று அந்த அமைப்பு முடிவெடுத்துள்ளது.
உ.பி.யில் பைசாபாத் மாவட்டத்தில் பள்ளிவாசல் கட்ட வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் பாபர் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருத்துவமனைக்கு மருத்துவர் கபில் கான் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு செய்தி நேற்று மாலை முதல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது. இதனை உண்மை என்று நம்பி பலரும் பரப்பி வருகின்றார்கள்.
இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த 5 ஏக்கர் நிலம் பாஜகவின் அடிமைகளாகச் செயல்படும் உ.பி. வக்ப் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இப்படிப் பட்ட திட்டமில்லை என்று அவர்கள் தெளிவாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
#BabriMasjidAwaitsJustice

No comments:
Post a Comment