Wednesday 23 May 2012

வேலை வழங்கும் பல்வேறு துறைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.
 
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.

1.
விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
 2.
வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
 3.
பயோ டெக்னாலஜி (Bio Technology)
 4.
பி-பார்ம் (B – Pharmacy.)
 5.
பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO   Industry.)
 6.
கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
 7.
நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
 8.
பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).
 9.
மனித உரிமைகள் (Human Rights.)
 10.
விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
 11.
உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
 12.
தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
 13.
தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
 14.
பன்னாட்டு வாணிபம் (International Trade.)
 15.
மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)
 16.
ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
 17.
பொருள் மேலாண்மை (Material Management.)
 18.
உற்பத்தி மேலாண்மை (Production Management)
 19.
பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
 20.
கிராம மேலாண்மை (Rural Management.)
 21.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
 22.
சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
 23.
செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
 24.
மண்ணியல் (Geology.)
 25.
தோட்டக்கலை (Horticulture.)
 26.
விளம்பர மேலாண்மை (Advertising Management).
 
மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

I
கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்.

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:

V போட்டித் தேர்வுகள்
 
இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்
 
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
 இந்தப் பிரிவை
1) நுழைவுத் தேரிவுகள்
2)
பட்டபப்டிப்புகள்
3)
டிப்ளமோ படிப்புகள்
4)
சான்றிதழ் படிப்புகள்
என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
1) நுழைவுத் தேர்வுகள்

1.
ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
 2.
ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
 3.
ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
 4.
கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
 5.
இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
 6.
என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
 7.
பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
 8.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
 9.
சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
 
2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்

1.
வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
 2.
கட்டிடக்கலை (Architecture)
 3.
தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
 4.
பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
 5.
பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation        Engineering)
 6.
பயோ டெக்னாலஜி (Bio Technology)
 7.
கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
 8.
வேதிப் பொறியியல் (Chemical Engineering)
 9.
தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
 10.
கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
 11.
கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
 12.
மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
 13.
மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
 14.
மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
 15.
தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
 16.
சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
 17.
தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
 18.
கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
 19.
தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
 20.
உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)
 21.
மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
 22.
மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
 23.
மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
 24.
சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
 25.
எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
 26.
பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
 27.
உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
 28.
அச்சுப்பொறியியல் (Printing Technology)
 29.
ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
 30.
டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)

3)
டிப்ளமோ படிப்புகள்

1.
கட்டிடப் பொறியியல்
 2.
மின்சாரப் பொறியியல்
 3.
மின்னணுப் பொறியியல்
 4.
எந்திரவியல் பொறியியல்
 5.
உற்பத்திப் பொறியியல்
 6.
வேளாண்மைப் பொறியியல்
 7.
கணினி அறிவியல் பொறியியல்
 8.
மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
 9.
கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
 10.
வேதிப்பொறியியல்
 11.
தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
 12.
வேதித்தொழில்நுட்பம்
 13.
பாலிமர் தொழில்நுட்பம்
 14.
பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்
 15.
மென்;பொருள் தொழில்நுட்பம்
 16.
மீன்வளத் தொழில்நுட்பம்
 17.
கைத்தறி; தொழில்நுட்பம்
 18.
அச்சுத்தொழில்நுட்பம்
 19.
பிளாஸ்டிக் டெக்னாலஜி
 20.
சரிக்கரைத் தொழில்நுட்பம்
 21.
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
 22.
கணினித் தொழில்நுட்பம்
 23.
கார்மெண்ட் டெக்னாலஜி
 24.
மரத் தொழில்நுட்பம்
 25.
வனத்துறைத் தொழில்நுட்பம்
 26.
காலணிகள்த் தொழில்நுட்பம்
 27.
போர்மேன் டெக்னாலஜி
 28.
ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
 29.
ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்
 30.
விற்பனைத் துறை
 31.
காஸ்மெட்டாலஜி

4)
சான்றிதழ் படிப்புகள்

1.
பிளாக்ஸ்மித்
 2.
தச்சுத்தொழில்
 3.
மோல்டர்
 4.
பெயிண்டர்
 5. `
டீட் மெட்டல் ஒலீ;க்கர்
 6.
கட்டடம் கட்டுபவர்
 7.
பேட்டரின் மேக்கர்
 8.
மெக்கானிக் டீசல்
 9.
பிளம்பர்
 10.
மெக்கானிக் கிரெய்ண்டர்
 11.
மெக்கானிக் மோட்டார்
 12.
கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
 13.
வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
 14.
மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
 15.
ஒயர்மேன்
 16.
டர்னர்
 17;
மெக்கானிஸ்ட்
 18.
பிட்டசு
 19.
எலக்ட்ரோ பிளேட்டர்
 20.
ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
 21.
சர்வேயர்
 22.
இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
 23.
எலக்ட்ரீ சியன்
 24.
மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
 25.
கருவி வடிவமைப்பாளர்
 26.
டிராட்ஸ்மேன் சிவில்
 27.
டிராட்ஸ்மேன் மெக்கானிக்
 28.
மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
 29.
மெக்கானிக் ஜெனரல்
 30.
பிழைத்திருத்தல்
 31.
சுருக்கெழுத்து ஆங்கிலம்
 32.
ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்
 33.
எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
 34.
கட்டிங் அண்ட் டெய்லரிங்
 35.
காலணிகள் உருவாக்குதல்
 36.
சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி
 
II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
 
இந்த பிரிவை 
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
 2)
மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி
 3)
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
 4)
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
 5)
மனை அறிவியல்
 6)
பொதுப்பாடங்கள்
 
என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
1) மருத்துவ நுழைவுத்தேர்வு

1.
ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் பூனே
 2.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உ.பி
 3.
ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்
 4.
ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் புதுச்சேரி
 5.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உ.பி
 6.
கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி வெள்ளுர்
 7.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
 
மருத்துவம் பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி
 
பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
 1. எம்.பி.பி.எஸ்.
 2.
பி.டி.எஸ்.
 3.
பி.ஹெச்.எம்.எஸ்
 4.
பி.ஏ.எம்.எஸ்
 5.
பி.எஸ்.எம்.எஸ்
 6.
பி.பார்ம்
 7.
பி.பி.டி.
 8.
பி.எஸ்.சி (நர்சிங்)
 9.
பி.ஒ.டி.
 
மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி

1.
மருத்துவத் தொழில்நுட்பம்
 2.
லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
 3.
லேப் டெக்னீசியன்
 4.
இ.சி.ஜி டெக்னீசியன்
 5.
டெண்டல் மெகனிக்
 6.
ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
 7.
ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
 8.
கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி
 9.
ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
 10.
மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
 11.
டிப்ளமோ இன் டயாலிசிஸ்
 12.
மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
 13.
மருத்துவ நுன்னுயிறியல்
 14.
டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
 15.
பெரிபுயூசன் டெக்னாலஜி
 16.
பிசியோதெரபி
 17.
ஸ்பீச் தெரபி
 18.
நர்சிங்
 
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1.
வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
 2.
பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
 3.
கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
 
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்

1.
விலங்கியல் பி.எஸ்.சி
 2.
மீன்வளம் பி.எஸ்.சி
 3.
எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
 4.
எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
 5.
அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
 6.
நுன்னுயிரியல் பி.எஸ்.சி எம்.எஸ்.சி
 
மனை அறிவியல்

1.
மனை மேலாண்மை
 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து
 3.
குழந்தை வளர்ச்சி
 4.
ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
 5.
உணவு சேவை மேலாண்மை
 6.
டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
 7.
டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்
 8.
உணவுத்தொழில்நுட்பம்
 9.
மனித ஊட்டச்சத்து
 10.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
 11.
உணவு உற்பத்தி
 12.
பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி
 
பொதுப்பாடம்

1.
இயற்பியல்
 2.
வேதியியல்
 3.
தாவரவியல்
 4.
விலங்கியல்
 5.
பயன்பாட்டு புள்ளியல்
 6.
பயன்பாட்டு கணிதம்

III
பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1.
சாட்டர்டு அக்கவுண்டன்சி
 2.
வங்கியியல்
 3.
சட்டப்படிப்பு பி.எல்
 4.
மேலாண்மை பி.பி.ஏ
 5.
பொருளாதாரம் பி.ஏ
 6.
வணிகவியல்
 7.
டீச்சிங்
 8.
உலக அறிவியல்
 9.
உளவியல்
 10.
வரலாறு
 11.
புவியியல்
 12.
ஆங்கிலம்
 13.
மொழி
 14.
இசை
 15.
நிதி
 16.
ஊடகம்
 17.
தகவல் தொடர்பு
 18.
காஸ்ட்அக்கவுண்டன்சி

IV
உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1.
உடற்கல்வி
 2.
சட்டப்படிப்பு
 3.
ஏவியேசன் விமானப்பணிண்பெண்
 4.
பாஸ்மெட்டாலஜி
 5.
பேஷன் டெக்னாலஜி
 6.
காப்பீடு
 7.
கடல்சாரபடிப்பு
 8.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா
 9.
புகைப்படம் பற்றிய படிப்பு
 10.
கலை/பயன்பாட்டுக் கலை
 11.
நகை வடிவமைப்பு
 12.
பேஷன் மாடலிங்
 14.
இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
 15.
பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
 16.
கலையரங்கம் மற்றும் நடிப்பு
 17.
விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
 18.
நடிப்பு
 19.
ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
 20
சின்மாட்மோகிராபி
 21.
இயக்கம்
 22.
டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
 23.
வீடியோகிராபி
 24.
பிலிம் எடிட்டிங்
 25.
நாடகக்கலை
 26.
பிலிம் டைரக்டிங்
 27.
சினிமா நடிப்பு
 28.
ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
 29.
பிலிம் எடிட்டிங்
 30.
படத் தயாரிப்பு
 31.
பிலிம் பிராசசிங்
 32.
பிலிம் ஸ்டடிஸ்
 33.
கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
 34.
பிரிஹேன்ட் அணிமே`ன்
 35.
பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்
 36.
மோசன் பிக்சரி போட்டோகிராபி
 37.
நிகழ்ச்சி மேலாண்மை
 38.
விசூவல் கம்யூனிகேசன்
 39.
புத்தக பதிப்பு
 40.
அரசியல் அறிவியல்
 41.
குற்றவியல்
 42.
விக்டிமாலஜி
 43.
நடனம்
 44.
ஜெம்மாலஜி
 45.
தொழிற்ச்சாலை வடிவமைப்பு
 46.
பூமி பற்றிய அறிவியல்
 47.
நகரத் திட்டமிடல்
 48.
மண்ணியல்
 49.
சமூகவியல்

V
போட்டித் தேர்வுகள்
 புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
போட்டித்தேர்வுகளை 1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
 2.
வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
 
1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1.
பொறியியல்த்துறைத் தேர்வுகள்
 2.
வங்கித் தேர்வுகள்
 3.
இந்திய வனத்துறைத் தேர்வகள்
 4.
மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
 5.
கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்
 6.
இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
 7.
சிவில் சரிவீஸஸ் தேர்வு
 8.
எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
 9.
ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

2.
வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1.
சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
 2.
வருமானத்துறைத் தேரிவகள்
 3.
எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
 4.
இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
 5.
இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
 6.
இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
 7.
கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
 
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.
 
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான
 
வாழ்க்கைகு வழிவகுக்கும்.

- Dr.
எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்
 
நன்றி:-தினத்தந்தி

Can you afford to miss the only train / ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

Can you afford to miss the only train ?
ரமேஷ் ஒரு இளைஞன்.... தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன் படித்த படிப்புக்கு அந்தக் கம்பெனியில் மட்டும்தான் வேலை கிடைக்கும் நாளை காலைப் பத்து மணிக்கு அவனுக்கு சென்னையில் இன்டர்வ்யூ. தனது ஊரில் இருந்து சென்னை செல்ல ஒரே ட்ரெயின் தான் உள்ளது. அதுவும் இன்று இரவு பத்து மணிக்குப் புறப்படுகிறது.... இதோ இன்னும் சில நிமிடங்களே உள்ளன வண்டி புறப்படுவதற்கு...... ரயில் நிலையத்தை அப்போதுதான் அடைந்தான் ரமேஷ்... ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவனுக்கு... தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு... அவனது பரமவிரோதிகளான சொக்கலிங்கமும் நடராஜனும் அவன் முன்பதிவு செய்திருந்த அதே கம்பார்ட்மெண்ட்டில் அவனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரமேஷுக்கு அவர்களை அறவே பிடிக்காது.... வெறுப்பென்றால் அவ்வளவு வெறுப்பு... இவர்களோடு அமர்ந்து நான் பயணம் செல்வதா?..... முடியவே முடியாது..... ஏறிய அதேவேகத்தில் ரயிலில் இருந்து இறங்கியும் விட்டான் ரமேஷ்!
தூர நின்று யோசித்தான் ரமேஷ். ஆனால் நாளை எனக்கு நடக்க இருப்பதோ அவ்வளவு முக்கியமான இன்டர்வ்யூ! இந்த வண்டியை விட்டு விட்டால் வேறு வழியே கிடையாது. இவ்வாய்ப்பை தவற விட்டால் எனது எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனக்கு வாழ்வா அல்லது சாவா என்பதைத் தீர்மானிப்பது நாளைய இன்டர்வ்யூ...... என்ன செய்ய? இவர்களுக்காக எனது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதா?
 இல்லை இல்லை எனக்கு என் வேலை முக்கியம்! நோக்கம் முக்கியம்!.எதிர்காலம் முக்கியம்!... வருவதை சந்திப்போம்!.... ஒரு தீர்மானத்தோடு கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தான் ரமேஷ்!
இங்கு ரமேஷின் நிலையில் புத்தியுள்ள யாராக இருந்தாலும் அவ்வாறுதானே  தீர்மானிப்பார்கள்! .....ஏன் இந்த உதாரணம் சொல்லப் படுகிறது தெரியுமா?
 இன்று பல மாற்று மத அன்பர்கள் இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை உணர்கிறார்கள்.
Ø  இதில் மூடநம்பிக்கைகள் இல்லை.
Ø  வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை.
Ø  புரோகிதர்கள் இல்லை,
Ø  மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டுதல் இல்லை.
Ø  தீண்டாமை இல்லை, சாதிக் கொடுமைகள் இல்லை .
Ø  வழிபாட்டில் வேற்றுமை பாராட்டுதல் இல்லை
Ø  பகுத்தறிவுக்கு ஒவ்வாத போதனைகள் இல்லை.
Ø  பெற்றோரைப் புறக்கணித்தல், வரதட்சனை, பெண்சிசுக் கொலை, போன்ற வன்கொடுமைகள் இல்லை.
 இன்னும் இவைபோன்ற எண்ணற்ற  இஸ்லாத்தின் சிறப்புகளால் கவரப்பட்ட பலர், “எல்லாம் சரி, ஆனால் முஸ்லிம்கள் சிலரின் அல்லது பலரின் நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு புறம்பாக இருக்கிறதே!என்று கூறி இந்த இறைமார்க்கத்தைப் புறக்கணித்து நிற்கிறார்கள். இவர்கள்  சிந்திப்பதற்காகத்தான் மேற்படி உதாரணம் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டிய விடயம் இதுதான்......
நாம் அனைவரும் ஒரே மனிதகுலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தினர்களே.. நமது இறைவனும் ஒரே ஒருவனே. நாம் வாழும் இடமும் ஒன்றுதான்.. நாம் வாழும் காலகட்டமும் ஒன்றுதான். நமக்கு நேர்வழிகாட்டுவதற்காக இறைவன் அருளிய மார்க்கமும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? நமக்கு மட்டுமல்ல, நம் மூதாதையர்களுக்கும் இறைவன் ஒரே மார்க்கத்தைத் தான் அருளியிருந்தான். அதுதான் இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற மார்க்கம். அதுவே அரபு மொழியில் இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது. இதைப் பின்பற்றினால் நாளை மறுமையில் நாம் சொர்க்கத்தை அடையலாம் இல்லையேல் நாம் சென்றடைவது நரகத்திற்குத்தான்!
ஆக, இன்று சொர்க்கம் செல்ல இஸ்லாம் என்ற ஒரு வாகனம்தான் எஞ்சியுள்ளது. இவ்வாகனத்தில் சில விரோதிகள் ஏறிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக உங்கள் நீண்ட எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வீர்களா?
மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை என்பது கடல் நீரில் நம் விரலை முக்கி எடுத்தால் விரல் நுனியில் காணும் அரை சொட்டு நீரளவுதான் என்பது நபிகளாரின் கூற்று.. மறுமை என்பதோ முடிவில்லாதது. அங்கு நமது இருப்பிடம் ஒன்று சொர்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமையும். மூன்றாவதாக ஒரு இருப்பிடம் கிடையாது. நாளைய நமது மறுமை இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டிய தேர்வுக் களம் இதுவே.
இவ்வுலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் போன்றது. இங்கு நாம் காணும் யாவருமே பரீட்சைக்கு உட்படுத்தப்படுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, வெறும் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருந்தாலும் சரியே. தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற ஒரு பரீட்சையை எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு பொறுப்புணர்வுள்ள மாணவன் தனது சக மாணவன் பரீட்சைக்கூடத்தில் அமர்ந்து கொண்டு சேட்டைகள் செய்துகொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கிறான் என்பதற்காக தனது இலட்சியங்களை வீணடிக்க மாட்டான். வாய்ப்பு கிடைத்தால் சகமாணவனுக்கு நினைவூட்டலாம் அல்லது எச்சரிக்கலாம். பின்விளைவுகளை எடுத்துரைத்து அவனை திருத்த முயற்சிக்கலாம். ஆனால் தனது குறிக்கோளைத் தவற விடமாட்டான். அதுபோலத்தான் இவ்வுலகிலும் நாம் செயல்படவேண்டும்.
ஆக, நாம் ஒவ்வொருவரும் நமக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இறைவன் நமது காலட்டதிற்க்காக அனுப்பியுள்ள தூதர் மூலமாக அனுப்பபட்ட இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது தெளிவு. மாறாக முன்னோர்களின் வழி என்றும் முன்னாள் இறைத்தூதர்களின் வழி என்றெல்லாம் சொல்லி எதைப் பின்பற்றினாலும் மோட்சத்தை அடைய முடியாது. இறைவன் தனது திருமறையில் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்.
(AlQuran 3:19) நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நபிகள் நாயகம் வருவதற்குமுன் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத்தான் இங்கு வேதக்காரர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இறுதியாக இஸ்லாத்திற்குப் புறம்பாக பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு சில வார்த்தைகள்.... நீங்கள் உங்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாம் இஸ்லாத்தின் அருமையை உணராது இன்னும் உங்கள் தவறான போக்கைத் தொடர்வீர்களானால் இறைவன் உங்களை தனது தண்டனைகள் மூலம் அழித்துவிட்டு உங்களின் இடத்தில் இஸ்லாத்தின் அருமைகளை உணர்நது உறுதியாகப் பின்பற்றும் மக்களை உங்கள் இடத்தில் குடியமர்த்துவான் என்று திருமறை எச்சரிக்கிறது.
(AlQuran47:38) ......எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே இதழில் இருந்து....)

Tuesday 22 May 2012

பன்றிக் கொழுப்பு.. உஷார்....................

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.
இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.
சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?
உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.
இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.
பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.
பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.
இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.
இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.
E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.
பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.
இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))
இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!
சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.
இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.
தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.
"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)
நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
http://www.nouralislam.org/tamil/islamkalvi/indextamil.html
 

Monday 21 May 2012

+2 Tamilnadu HSC Result - 2012

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


please CTRL + click 


 Tamilnadu HSC Result - 2012
All the Best

இன்ஷாஅல்லாஹ்.... TNTJ மாணவரணி சார்பாக நடைபெறவிருக்கும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கல்விவழிகாட்டி நிகழ்ச்சியின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாணவ மாணவிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

27.05.2012  Time 10 to 1  திருநெல்வேலி, செங்கோட்டை    N.அல் அமீன் B.E

27.05.2012  Time 10 to 1 & 4 to 7 திருவாரூர், திருவாரூர் நகரம் T.H.கலீலுர் ரஹ்மான் MBA


நாள்
நேரம்
மாவட்டம்/கிளை
பேச்சாளர்
நிகழ்ச்சி தொடர்பு
9884159497
26-05-2012
  காலை 10 -1 
தஞ்சை வடக்கு, கும்பகோணம்
N.அல் அமீன் B.E
9940998094
27-05-2012
  காலை 10 -1 
திருநெல்வேலி, செங்கோட்டை
N.அல் அமீன் B.E
9787004622
27-05-2012
  காலை 10 -1 
திருவாரூர், கொல்லாபுரம்
T.H.கலீலுர் ரஹ்மான் MBA
9788792488
27-05-2012
  மாலை 4 -7 
திருவாரூர், திருவாரூர் நகரம்
T.H.கலீலுர் ரஹ்மான் MBA
9788792488










உங்கள் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியை நடத்த தொடர்பு கொள்ளவும் - 9884810993