Sunday 18 March 2012

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

                                                  ஓரிறையின் நற்பெயரால்

தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
2. FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc..

இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

தீவிரவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை சார்ந்தது அல்ல என்று உண்மை இருக்க, சில ஊடகங்களோ,

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல...
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!

-
என்று கூறுகின்றன.
மேற்கத்திய ஊடகங்களால் மக்கள் மத்தியில் 
திரும்ப திரும்ப பரப்படுகின்ற ஒரு விஷமப்பிரச்சாரம் இது. 
உலகில் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை மாத்திரம் ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மன்பான்மைக்கு என்ன காரணம்..?
தீவிரவாதம் முஸ்லிம்களுக்கு குலச்சொத்தா என்ன ...?  

இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..!

பயங்கவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும் யார் தெரியுமா...?

1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது.1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் இச்சொல் உருவாக்கத்திற்கு காரணம். அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்...

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர்
அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார்.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார்.
மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார்.

1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.

1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தவெடிக்குண்டு சம்ப்வத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்

1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஹஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.

1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். 
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!

1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலேக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.

முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?

1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.

1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். 

இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா மற்றும் பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.

அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!

1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது

நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள் ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.

பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்

·                     1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
·                     1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
·                     1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
·                     1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
·                     பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.

மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..!

இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A  அமைப்பு

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு 

உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி

மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு


இது மட்டுமா நம் இந்தியாவில் கூட 

பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது.

திரிபுராவில் A T T F  மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. 

நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 
2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில்அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்)

எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.

இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும்.

இறுதியாக

60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர்
இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள்
தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே...  
யாரும் முஸ்லிம்கள் இல்லை

இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, L T T E  ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, ஓம் சின்ரிக்கோவை - புத்த தீவிரவாதிகள் என்றோ, A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ,

யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..

முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. 

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம் என்பதே என் போன்றோர்களின் வேண்டுகோள்!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Our sincere thanks to :
Dr.ZAHIR NAIK &
இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் (IIM)

Tuesday 6 March 2012

சஞ்சீவ் பட்: அரிதாய் ஒரு அறச்சீற்றம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Source: புதிய கலாச்சாரம்


விசாரணையே தேவையில்லாமல் சுட்டுக் கொல்லப்படத்தக்க ஒரு கிரிமினலைக் காட்டச்சொன்னால் தயக்கமின்றி நரேந்திர மோடியை நோக்கி நாம் விரலை நீட்டலாம். ஆனால் அவர் குஜராத்தைக் கூறு போட்டுத் தங்களுக்கு வழங்கியிருப்பதால், முஸ்லிம்களைக் கூறு போட்ட மோடியின் குற்றத்தை நாடு மறந்துவிடவேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆளும் வர்க்க ஊடகங்களும் 2002 இனப்படுகொலையை, கவனக்குறைவால் நேர்ந்து விட்ட ஒரு தவறுபோலத்தான்  காட்டுகின்றன. சி.பி.ஐ இன் சிறப்புப் புலனாய்வுக் குழுவும், நீதித்துறையும், வழக்குகளை மோடிக்கு நோகாமல் மூடுவதுதெப்படி என்றே சிந்திக்கின்றன. காங்கிரசு கட்சி, தன் மீது வீசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கான கேடயமாக மட்டுமே மோடியைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது பார்ப்பனப் பாசிசத்திமிரைப் பிரகடனப் படுத்தும் விதத்தில் ஜெயலலிதா மோடியை முன்வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்த, கவுரவமே இல்லாத வலது இடது போலிகள் மோடியின் அருகமர்ந்து பல்லிளிக்கிறார்கள்.

வஞ்சகமும் துரோகமும் பிழைப்புவாதமும் கோலோச்சுகின்ற இந்தச் சூழலில்தான் சஞ்சீவ் பட், என்றொரு குஜராத் போலீசு அதிகாரி மோடியை எதிர்த்து நிற்கிறார். அந்தக் குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார். 2002 இல் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டவுடன், நடந்த உயர் போலீசு அதிகாரிகள் கூட்டத்தில், "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளியிடுவதைத் தடுக்காதீர்களென்று வெளிப்படையாகவே மோடி உத்தரவிட்டார்' என சி.பி.ஐ புலனாய்வுக் குழுவிடம் கூறினார் சஞ்சய் பட். அவரது சாட்சியத்தை சி.பி.ஐ அலட்சியப்படுத்தவேஇதனை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகவும் தாக்கல் செய்தார். அந்த அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவரது வாகன ஓட்டுனர் கே.டி.பந்த் என்பவரை மிரட்டி, " பொய் சாட்சி சொல்லுமாறு சஞ்சீவ் பட் தன்னை மிரட்டியதாக' மோடி அரசு புகார் எழுதி வாங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பொய் வழக்கு போட்டு, பட்டை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறது.

காங்கிரசு எம்.பி இஷான் ஜாப்ரி கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கிலும் மோடியின் நேரடித் தொடர்பை நிறுவியிருக்கிறார் சஞ்சய் பட். அப்போது உளவுத்துறை துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், "குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை கொலைக்கும்பல் சுற்றி வளைத்திருப்பது பற்றி மோடிக்கு நான் நேரடியாகத் தகவல் கொடுத்தும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை' என்று சாட்சியமளித்திருக்கிறார். 2002  இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து சாட்சியம் அளித்த அமைச்சர் ஹிரேன் பாண்டியா 2003 இல் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சஞ்சீவ் பட்.

இந்த மனுவைத் தாக்கல் செய்த மூன்றாவது நாள் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவரது வங்கி லாக்கரைத் திறந்து சாட்சியங்களைத் திருட போலீசு துடித்தது. சோதனைக்கு சம்மதித்தால், உடனே பிணையில் விடுவதாக சஞ்சீவ் பட்டிடம் பேரம் பேசினார் நீதிபதி. "இது கொள்கைக்கான போராட்டம். நீதிமன்றத் தரகர்களுடன் எனக்கு சமரசம் தேவையில்லை. அரசின் நடவடிக்கை எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று காறி உமிழ்ந்த சஞ்சீவ் பட், 18 நாட்கள் சிறைக்குப் பின் பிணையில் வந்திருக்கிறார். "மோடி இன்று முதல்வராக இருக்கலாம். 2002 படுகொலையைப் பொருத்தவரை மோடி ஒரு கிரிமினல். ஒரு கிரிமினலாகத்தான் மோடியை நடத்தவேண்டும்' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார். மோடியின் குற்றத்தை மறுக்கின்ற அல்லது மறக்கின்ற பேடிகளை எப்படி நடத்துவது? இது குறித்த நம் அணுகுமுறைதான் சஞ்சீவ் பட் போன்றோருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.



Sunday 4 March 2012

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!


சமீப காலமாக செய்தித் தாள்களைப் புரட்டினால் துவக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயிலும் சிறுமிகளின் மீதும் பருவ வயது மாணவிகளின் மீதும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் வரம்பு மீறும் பாலியல் வல்லுறவுகள் மனதை பாதிப்பதாக அமைந்துள்ளது.

இதைப் படிக்கும் நமக்கே மனதை வெகுவாக பாதிக்கிறதென்றால் அந்தப் பிள்ளைகளைப் பெற்று நெற்றி முகர்ந்து வளர்த்து எதிர்காலத்தில் கல்விமான்களாகி சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப் பட்டு பணத்தையும் மூட்டை, மூட்டையாக கட்டி கல்விப் பயிலப் பள்ளிக்கு அனுப்பிய தாய், தந்தையரின் மனநிலை எப்படி பாதித்திருக்கும் ?

காதல் வலை விரிக்கும் ஆசை வார்த்தைகளும், பணிய வைக்கும் மிரட்டல்களும்.
  • வயது முதிர்ந்த வாத்தியாராக இருந்தால் என்னுடைய விருப்பத்திற்கு இணங்க வில்லை என்றால் ஃபைலாக்கி விடுவேன்- இது பணிய வைக்கும் மிரட்டல்.
  • இளைய வயது வாத்தியாராக இருந்தால் நானும் சிறு வயதுக் காரண் தான் இன்னும் எனக்கு திருமனம் ஆகவில்லை நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் உன்னையே எனது துனைவியாக்கிக்கொள்ள விரும்புகிறேன்- இது ஆசை வார்த்தை.
மேற்காணும் விதம் பேசி பாலியல் தொடர்பான எதையுமே அறியாத சிறுமிகளை, பருவ வயது பெண்களை ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முதல் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள், கணினி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக்கொண்டு பிஞ்சு மலர்களை கிள்ளி  கசக்கி எறிந்து விடுகின்றனர். 
 
எதோ ஒரு மாணவியை மட்டும் இந்த ஈனச்செயலில் ஈடுபடுத்தி விட்டு நிருத்திக்கொண்டார்களா என்றால் ? அதுவும் இல்லை ! இந்த வரம்பு மீறும் நிகழ்வுகள் இவர்களால் பல மாணவிகளுடன் தொடர்ந்து கொண்டே தான் செல்கின்றன. 

தன்னிடம் கல்வியையும், ஒழுக்கத்தையும் பயில வந்த சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வை சிதைத்து சின்னாப்பின்னப்படுத்துகின்ற ஆசிரியப் பெருந்தகை(?)களுக்கு இந்திய குற்றவியல் தண்டனையில் உடலில் வருத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கோ, உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கோ தண்டனைகள் இல்லை என்பதால் சிறுமிகளையும், பருவ வயதுப் பெண்களையும் வாழைக் குருத்துகளை அடியோடு வெட்டி சாய்ப்பதைப் போல சாய்த்து விடுகின்றனர். 

35 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன்...
கடந்த 2009ல் கன்யாகுமரி மாவட்டம் விளவங்கொடு தாலுக்கா, இடைக்கோடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்னகுமார் என்ற 28 வயதையுடைய கணினி ஆசிரியர் தன்னுடைய லேப்டாப்பை பழுது நீக்க ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் கொடுததிருந்தார். பழுது நீக்கப்பட்டதும் லேப்டாப் கேலரியை கம்ப்யூட்டர் டெக்னீஷியன் யதார்த்தமாக ஓப்பன் செய்ய திகைத்துப் போய் விட்டார். 

அதில் 35 க்கும் மேற்பட்ட கணினி பயிலும் மாணவிகளுடன் கிருஷ்ணகுமார் உல்லாசமாக இருக்கும் வீடியோ க்ளிப்களைக் கண்டு கொதித்துப்போனவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீஸாரின் ஆலோசனைப் பிரகாரம் கிருஷ்னகுமாருக்கு போன் செய்து லேப்டாப்பைக் கொடுத்ததும் மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இக்கயவர்கள் இது போன்ற சில்மிஷன்களில் சிக்குவது மிகக்குறைவு சிக்கிக் கொண்டாலும் சிறிது காலம் சுகாதாரமான சிறை வாழ்க்கை, அதன் பிறகு ஜாமீனில் வெளியில் மீண்டும் உல்லாச வாழ்க்கை பழைய படியேத் தொடரும், தொடர்ந்தும் இருக்கிறது. 

சினிமா நடிகைகளைப் போல ஆடு...
மத்தியப் பிரதேச மாநிலம் பேதல் மாவட்டத்தில் மகேஷ் மாலவ்யா எனும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நீண்ட காலமாக தன்னிடம் பாடம் பயிலும் சிறுமிகளை ஏமாற்றி வல்லுறவில் ஈடுபடுத்துவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

30-11-2012 அன்று வகுப்பு நடக்கும் பொழுது ஒரு மாணவனை அழைத்து பணம் கொடுத்து சாராயம் வாங்கி வரச்சொல்லி அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மாணவிகளை பெஞ்ச் மேல் ஏறி ஆடச்சொல்லி இருக்கிறார் பயந்து கொண்டு ஆடிய மாணவிகளை பிரம்பால் அடித்து சினிமா நடிகைகளைப் போல் வளைந்து நெளிந்து ஆடச்சொல்லி இருக்கிறார் பிரம்படித் தாங்க இயலாமல் சில மாணவிகள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து ஓடிச்சென்று தனது பெற்றோரிடம் கூற பெற்றோர்களும், பொதுமக்களும் பேதல் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் பொர்கரிடம் புகாரளிக்க பள்ளி நிர்வாகத்திலிருந்து அவரை சஸ்பென்ட் மட்டும் செய்யச்சொல்லி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே 2008ல் இதே பள்ளியில் சிறுமிகளிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பலாத்கார வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவரை பள்ளியில் தொடர்ந்து நீடிக்கச் செய்த பள்ளி நிர்வாகிகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

வரம்பு மீறலுக்கு வயது வரம்பு உண்டோ ?
பிப் 28,2012 அன்று ஊட்டி கீழ்கோத்தகிரி சந்தைப் பகுதியின் முக்கிய சாலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ சுமார் 8 மணி நேரம் போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கான ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இவ்வளவு நேரம் நீடித்த இந்த ஆர்பாட்டம் மின்வெட்டைக் கண்டித்தோ, விலைவாசி உயர்வைக் கண்டித்தோ அல்ல கஷ்டப்பட்டுப் பெற்று பாசத்தை ஊட்டி வளர்த்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஞானசூன்யமாக்கி வரும் சார்லஸ் என்ற 45 வயதையுடைய வணிகவியல் பாடம் நடத்தும் காம வாத்தியாரை கைது செய்யக்கோரி நடத்திய ஆர்ப்பாட்டமாகும்.

விரும்பிய மாணவிகளை விரும்பிய நேரத்தில் வல்லுறவில் ஈடுபடுத்துவது இவரது வாடிக்கையாம்(?) பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சக மாணவியிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூற இதைக் கேட்ட மாணவி அதிர்ச்சி மேலீட்டால் அந்தப் பாவி என்னையும் தான் என்றுக் கூற இச்செய்தி கசிந்து கொண்டே செல்ல இச்செய்தி காதுக்கு எட்டிய மாணவிகளில் பலர் என்னையும் தான், என்னையும் தான் என்றுக் கூற இறுதியாக இதற்கு முடிவு கட்ட நாண்கு மாணவிகள் களமிறங்கினர் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் சம்பவத்தைக் கூற அதனடிப்படையில் நடத்தப்பட்டது தான் மேல்படி உயிரோட்டமுள்ளப் போராட்டம். 

தகவலறிந்த ஆர்.டி.ஓ காந்திமதி அவர்கள் ஒருப் பெண் என்பதால் சம்பவத்தைக் கேட்டுக் கொதித்துப் போனவர் தாசில்தார் ஜோகி, நீலகிரி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் துரை, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேல்படி நான்கு மானவிகளையும் தனித் தனியாக விசாரனை நடத்தி சம்பவத்தை உறுதி படுத்திக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அதி விரைவுப் படை வரவழைத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத அளவு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வாத்தியாருக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.

பட்டப் பகலிலும் கூட...
கைதுகள் தொடர்ந்தாலும் தண்டனைகள் கடுமையானதாக இல்லாதக் காரணத்தால் அவர்களின் வரம்பு மீறல்கள் நின்ற பாடில்லை கடந்த காலங்களில் இலைமறை காய்மறையாக சில காமுக ஆசிரியப் பெருந்தகை(?)களால் நடத்தப்பட்ட வல்லுறவுகள் இன்று பட்டப் பகலிலேயே அதுவும் பெண்களின் தலைவி அம்மா(?) அவர்களின் ஆட்சியில் பகிரங்கமாக நடக்கத்தொடங்கி விட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உதயநேரி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேவசாமித்தியம் என்ற காமுக ஆசரியர் வகுப்பு நடக்கும் பகல் வேலையில் தனக்கு விருப்பப்பட்ட மாணவியை அழைத்து சத்தணவு கூடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு வெளியில் சொன்னால் ஃபைலாக்கி விடுவேன் என்று மிரட்டி அனுப்புவாராம். இதில் பாதிக்கபட்டு மனசாட்சி உறுத்திய ஜெயமாலா என்ற மாணவி தனது பெற்றொரிடம் சொல்லி அழுததும் செங்கநுல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்து தேவசாமித்தியம் கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

மூன்றாந்தர நாலாந்தர ரவுடிகளை விட மோசமாக...
மேல்படி வரம்பு மீறலில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பருவ வயது பெண்கள் இந்த அசிங்கத்தை பேற்றோரிடமும், உற்றாரிடமும் சொல்ல முடியாமல் விசையில் சிக்கிய எலிகளைப்போல் காமவெறிப் பிடித்த சில வாத்தியார்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நீண்ட காலமாகத் தொலைத்து அல்லல் படும் மாணவிகள் ஏராளம்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் அருண் என்ற 38 வயதையுடைய பேராசிரியரின் கோரப் பிடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்த ஒரு மாணவியின் துயர சம்பவத்தைப் படிக்கும் எவருடைய கண்களும் கசியாமல் இருக்காது. ஆனால் அந்த கல் நெஞ்சனுக்கு கசிய வில்லை.

அருணிடம் அந்த மாணவி அவருடைய வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்தார் சிறிது நாட்கள் கழிந்ததும் அந்த மாணவியின் மீது காதல் வலையை மெல்ல விரித்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் அதை நம்பிய அந்த மாணவி அவருடன் நெருக்கமானார் ஒரு நாள் மயக்க மருந்தை குளிர் பாணத்தில் கலந்து கொடுத்து சீரழித்தார் அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துக்கொண்டு வீடியோ க்ளிப்பை அப்பெண்ணிடம் காட்டி காதல் வலையை கட் பண்ணி காமவலையில் கவிழ்த்து ஆயுள் அக்ரீமென்ட் செய்து விட்டார்.

இது இடைவிடாமல் தொடர்ந்ததால் என்னை விட்டு விடுங்கள் சார் என்று அப்பெண் அழுது கெஞ்சிக் கேட்டும் விடுவதாகத் தெரியவில்லை இந்நிலையில் அருணுக்கு வேறுப் பெண்ணுடன் திருமனமும் நடந்தது இத்துடன் தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்த மாணவி.

ஆனால் அந்த நிம்மதிப் பெருமூச்சு நீடிக்கவில்லை 1-3-2012 அன்று அந்த மாணவிக்கு அருண் போன் செய்து தனது மனைவி வீட்டில் இல்லை உடனடியாக நீ வர வேண்டும் என்று வரவழைத்து அருணும், அவனது நன்பன் ராம்குமாரும் அப்பெண்ணை சீரழித்து அதையும் வீடியோவில் பதிந்து இன்னும் எப்பொழுது அழைத்தாலும் தாமதமின்றி வரவேண்டும் மீறினால் விடியோ க்ளிப்பை இணையத்தில் விட்டு விடுவேன் என்றுக் கூறி மிரட்டி அனுப்பி உள்ளார். 

இனியும் இதை சகிக்க முடியாது என்று முடிவுக்கு வந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிக் கதறி அழுதுள்ளார். அவரது பெற்றோர் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்து அருணையும், ராம்குமாரையும் கைது செய்து அவரது லேப்டாப்பை சோதித்த போது அந்த மாணவியை பலரிடம் ஈடுபடுத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ க்ளிப்கள் இருந்துள்ளன. இச்சம்வம் மார்ச் 1-3-2012 அன்று செய்தித் தாள்களில் வந்து தமிழ்நாட்டில் பரபப்பை எற்படுத்திய சம்பவமாகும்.

இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் பலர் பயந்துகொண்டு வெளியில் சொல்வதில்லை, பருவ வயதுப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை நாசமாகி விடும் எவனும் வாழ வைப்பதற்கு முன் வர மாட்டான் என்றுக்கருதி மறைத்து விடுகின்றனர்.

ஒழுக்க விழுமங்களின் உயர்விடமாக கல்லூரிகள் கருதப்படுவதால் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை பற்றி அவ்வளவாக பெற்றோர்கள் விசாரிப்பதில்லை. இது தான் இவர்களை வரம்பு மீறச் செய்தது. 

துணிந்து ஒண்றிரன்டு மாணவிகள் புகார் செய்தாலும் சில்மிஷன் வாத்தியார்களுக்கு கிடைப்பது வெறும் சிறிது கால சிறை வாழ்க்கை மட்டும் தான்.

துணிந்து புகார் செய்த இவர்களுக்கோ சொந்த ஊரில் மாப்பிள்ளை கிடைக்காது பக்கத்து ஊரிலும் மாப்பிள்ளை எடுக்க முடியாத அளவுக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி விடுகின்றன பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று எழுதினாலும் அவர்கள் இன்னார் தான் என்பது அந்த மாவட்டம் முழுமைக்கும் தெரிந்து விடும்.

  • தொடர்ந்து நடந்து வந்த குழந்தை கடத்தலை கோவை மோகன் ராஜூக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் கடந்த அரசு குழந்தை கடத்தலை ஓரளவு முடிவுக்கு கொண்டு வந்தது.

  • தொடர்ந்து நடந்து வந்த வங்கி கொள்ளையை அதில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் வங்கிக் கொள்ளையை இந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

  • தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்கிளிலும் பரவலாக ஆசிரியர்களால் நடத்தப்படும் மாணவிகள் மீதான கற்பழிப்புகளை எந்த கவுன்டர் மூலம் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது ?

எந்த கவுன்டர் கொடுத்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற சிறுமிகளின் உயிரையும், மானத்தையும் கழுவிலேற்றும் கொடிய குற்றவாளிகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை குற்றங்கள் குறையவே குறையாது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் மனிதாபிமானமற்றது என்று விமர்சித்தோர் தொடர்ந்து விமர்சித்து வருவோர் அதை சற்று மாற்றி இன்று நடைமுறைப்படுத்தி வருவதைப் பார்த்து வருகிறோம்.

பெற்றோர்களே உஷார் !!
இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்காணிக்க வேண்டும் முடிந்தால் பாடம் பியற்றுவிக்கும் ஆசிரியர்களின் குணநலன்களை வெளிப்படையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும். 

இதை விடவும் முக்கியமாக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாக விசாரித்துக் கொண்டு அட்மிஷன் போட வேண்டும். 

இவர்களை கடுமையாக தண்டித்து அதன் பிறகு மீண்டும் இக்குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதுமான தண்டனைச் சட்டங்கள் இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லை என்பதால் தான் வங்கி கொள்ளையர்கள் மற்றும் கோவை மோகன் ராஜ் எதிர்த்தார்கள் அதனால் சுட்டோம் என்று போலீசார் பொய் புளுகும் நிலை ஏற்பட்டது. 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்