Friday 4 February 2022

உள்ளாட்சித் தேர்தல் 2022 நாள் நெருங்கும் நேரத்தில் எனது அன்பு கட்டளைகள்

அன்புள்ளம் கொண்ட முத்துப்பேட்டை தமுமுக/மமக கழக சொந்தங்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உள்ளாட்சித் தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் எனது அன்பு கட்டளைகள்...

1. யார் மனமும் புண்படும்படி உங்கள் பிரச்சாரங்கள் இருக்கக்கூடாது.

2. உண்மையையும், நாம் செய்யும் 28 ஆண்டு சேவையையும் சொல்லி ஓட்டு கேளுங்கள்.

3. பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுப்பதாய் எண்ணி நமது தரத்தை குறைத்துக்கொள்ளாதீர்கள்.

4. பிரச்சாரத்தின் தொடக்கத்திலேயே சிலர் அரசியல் நாகரீகமற்று நமது பக்கங்களில், பதிவுகளில் அவர்கள் விளம்பரங்களை பதிவேற்றுவதை போல நீங்களும் செய்யக்கூடாது.

5. மற்ற வேட்பாளர்களின் பிரச்சாரங்களை கொச்சைபடுத்தவோ, கிண்டலடிக்கவோ செய்யாதீர்கள்.

6. முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் பதிவுகளை கிண்டலடிக்கும் விதத்தில் எமோஜி, கமெண்டுகள் இடுவோரை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லுங்கள்.

7.  ஒருவரை ஒருவர் பகை முரணாக்கிக்கொள்ளாதீர்கள்.

8. தேவையற்ற விவாதங்களை புறந்தள்ளுங்கள்.

9. எதிர் வேட்பாளர்களையும், அவர்கள் சார்ந்த கட்சியினரிடையேயும் எவ்வித மோதல் போக்கையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

10. வேண்டுமென்றே ஒரு சில விசமிகள் இருதரப்பினருக்குமிடையில் விவாதங்களை கிளப்பி விட முனையலாம். எச்சரிக்கையோடு செயலாற்றுங்கள்.

11. கட்சிப்பணியில் மார்க்கத்தை கோட்டை விட்டு விடாதீர்கள். தொழுகை முஃமின்களின் நேரம் குறிக்கப்பட்ட கடமை என்பதை எந்நேரத்திலும் மறவாதீர்கள்.

12. அதுபோல தத்தமது குடும்பத்தை மறந்துவிடாது அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவர செய்யுங்கள்.

அன்புடன்
முத்துப்பேட்டை முஹம்மது அலீம்
நகரத்தலைவர் - தமுமுக/மமக

No comments:

Post a Comment