Wednesday 7 May 2014

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் -

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மோடியை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு வந்து சிறையில் தள்ள வேண்டும் - பெண் சிங்கம் மம்தா கர்ஜனை...!
இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள போங்கோவன் என்னும் இடத்தில் பேசிய மம்தா, மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெங்காலி பேசுபவர்களுக்கும் பெங்காலி மொழி பேசாதவர்களுக்கும் இடையே பிளவு உண்டாக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.
மக்கள் மத்தியில் வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரம் உண்டாக்க திட்டமிடும் மோடிக்கு பிரதமர் ஆக எந்த தகுதியும் கிடையாது.
தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் இவரின் இடு
ப்பை சுற்றி கையிற்றை கட்டி சிறையில் அடைக்கவேண்டும்.
அவர் இங்கு பொதுக்கூட்டங்களில் பேச நான் அனுமதித்துள்ளேன். இதே நான் இவ்வாறு குஜராத்தில் பேசமுடியுமா? இவர் அரசியலில் ஈடுபடவே தகுதி அற்றவர் என மம்தா பேசியுள்ளார்.
ஒரு வகையில் பார்த்தால் மம்தா சொன்னது உண்மை தான், மேற்கு வங்கத்தில் சென்று பேசிய மோடி அங்குள்ள மக்கள் மத்தியில் மொழி வாரியாக பிரச்சனையை ஏற்படுத்தினார்.
இதே மம்தா குஜராத் சென்று கண்டிப்பாக இவ்வாறு பேச முடியாது. அண்டர் கிரவுன்டில் ஏற்பாடு செய்து அடியாட்களை கொண்டு கூட்டம் நடத்த விடாமல் செய்வார்.
கெஜ்ரிவால் அங்கே சென்று எத்தனை சிரமங்களை மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
மோடியின் ஆட்டம் இத்துடன் முடிந்து விடுமா ?.
இன்னும் தொடருமா ?.
என்பதை அறிய இன்னும் சிறிது நாட்களே உள்ளன.
அவனுடைய ஆட்டம் முடிய அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

No comments:

Post a Comment