Monday 12 May 2014

துபாயில் கடந்த 6 மதமாக நடைபெற்ற பேச்சுப்பயிற்சி வகுப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.

இதில் 
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 6 மதமாக நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று 12.05.2014 இரவு 9.00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி வகுப்பு ஆரம்பிக்க பட்டது. இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் குவைத் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கலந்து கெண்ட அனைத்து பேச்சாளர்களும் சுமார் 10 நிமிடம் அவர்களது தலைப்பின் கீழ் பேசினார்கள். சகோதரர் அப்துல் பாசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களும் எவ்வாறு  தாவ பணி செய்ய வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பு சுமார் ஆறுமாத காலமாக அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்றது. இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் சுமார் 100 மேற்ப்பட்ட  தலைப்புகளில் உரையாற்றபட்டது. 

மேலும் சகோதரர் அப்துல் பசித் புஹாரி அவர்கள் ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் ஒரு சுருக்கமான உரை அளித்து இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு கலந்து கொண்டதுக்கான ஆவணம் பரமக்குடி.அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபாய் கிளை சார்பாக கொடுக்க பட்டது.


சகோ. முஹம்மது ரபி 


சகோ. இர்பான் அலி 
சகோ. சபியுல்லாஹ் 
சகோ. மதுக்கூர் ராவுத்தர் ஷா 

சகோ. சையது முஹம்மது 



சகோ. அப்துல் ரஹ்மான் 


முகம்மது இர்பான் அலி 



சகோ. மதுக்கூர் ஹாஜா

மேலும்  சகோ. மதுக்கூர் ஹாஜா இந்த பணி இன்ன பிற இடங்களிலும் நடைபெறவேண்டும் என கேட்டு கொண்டார்கள்..


சகோ. இபுராகிம் 
இறுதியாக இந்த பேச்சுப்பயிற்சி வகுப்பின் அமீர் திருச்சி இர்சாத் அஹ்மது அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment