Sunday 5 May 2013

நகர சாலைகளை சுத்தபடுத்தும் கடமையும் எங்களுக்கு உள்ளது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வருடா வருடம் அமீரகத்தின் தேசிய தினத்தை கோலாகலமாக கொண்டாடுவார்கள் அமீரக மக்கள்.அதிலும் துபாயில் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் துபாய் மக்களின் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக இருக்கும் .இதில் நான் பார்த்து வியந்த விடயம்,முதல் நாள் கொண்டாடத்தின் பொழுது தாங்களால் அசுத்த படுத்த பட்ட சாலைகளை அந்த மக்களே குடும்பம் குடும்பமாக சென்று மறுநாள் சுத்தபடுத்துவது.அதாவது எங்கள் நாட்டின் சாலைகளில் சந்தோஷ ஊர்வலம் நடத்த எவ்வளவு உரிமை உள்ளதே அதே போன்று எங்கள் நகர சாலைகளை சுத்தபடுத்தும் கடமையும் எங்களுக்கு உள்ளது என்பதில் அந்த மக்கள் தெளிவாய் உள்ளனர்.இந்த புரிதலும் கடமை உணர்வும் நம் மக்களுக்கு வருவதெப்போ???

No comments:

Post a Comment