முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Friday, 13 March 2020
Wednesday, 11 March 2020
ஆகாய ஆச்சரியம்.!
🐦
•அர்ஜென்டினாவில் இருந்து #பார்ன் #சுவாலோ என்ற சின்னஞ்சிறு #பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.
•இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?
•ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?
•அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
•பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!
உங்கள் நன்பனான AS
Monday, 9 March 2020
Thursday, 5 March 2020
காலியாகிறது_இந்தியாவின்_கஜானா… #தங்கத்தையும்_விற்கும்_ரிசர்வ்_வங்கி!
கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
#நரேந்திர_மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.
ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.
ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.
இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.
Source: NEW INDIAN EXPRESS
தமிழாக்கம்: நியூசு.இன்
உங்கள் நன்பனான AS
Shocking
இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டான்டன் என்பவர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இந்தியாவில் கஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நிலைமைகளைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இவர் இனப்படுகொலை கண்காணிப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தியவர்.
இந்தியாவில் முஸ்லிம்களின் இன அழிப்புக்கான பத்து படிகளை முன்வைத்துள்ளார். அவை:
1. வகைப்படுத்துதல் - மக்களை நாம் மற்றும் அவர்கள் என வகைப்படுத்துதல்.
2. அடையாளப்படுத்துதல் - பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்துதல்.
3. பாகுபாடு காணுதல் - குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து நாடற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித உரிமையும் கிடைக்காமல் செய்வதன் மூலம் மக்களிடையே பாகுபாடு காணுதல்.
4. மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல் - அவர்களை தீவிரவாதி என்றும் மனித சமூகத்தைப் பீடித்த நோய்க் கிருமிகள் எனவும் வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல்.
5. இன அழிப்பை செய்வதற்காக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துதல் - உதாரணம் கஷ்மீரில் ராணுவம் அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு அதிகாரிகள்.
6. ஒன்றுகுவித்தல் - பிரச்சாரங்களின் மூலம் மக்களை ஒருபக்கமாக ஒன்று குவிப்பதன் மூலம் குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்துதல்.
7. தயாரிப்பில் ஈடுபடுதல்.
8. துன்புறுத்துதல் - கஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் தற்போது நடந்து கொண்டிருப்பது.
9. ஒட்டுமொத்தமாக மக்களை அழித்தொழித்தல்.
10. மறுப்பு - செய்த படுபாதக செயலை மறுத்தல்.
டாக்டர் ஸ்டான்டன் ஏற்கனவே ருவாண்டா, புருண்டி, கம்போடியா மற்றும் ரோஹிங்யா இனப்படுகொலைகள் தொடர்பான உலக குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபை சார்பில் தீர்மானங்களை வரைவு செய்தவர்.
தற்போது இந்தியா இன அழிப்பை நோக்கி நகர்கிறது என இவர் அறிக்கை அளித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தியை சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பகிர்ந்துள்ளது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது...
Ahamed Meeran
Monday, 2 March 2020
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
அநியாயம் செய்வோறே இன்ஷா அல்லாஹ் நீங்கள் சீக்கிரம் அழியக்கூடிய நேரம் வந்துட்டது இன்ஷா அல்லாஹ்.
உன்னைப் பெற்றது ஒரு தாய் ஆனால் உன்னை வளர்த்தது RSS BJP இது உனக்கு சாபம் உன்னை வளர்த்தவரனுக்கும் சாபமே.
உன் பார்வையில் இந்த பெண் மற்றும் குழந்தை என்ன பாவம் செய்ததுடா???
ஐயோக்கியன்
நீ இந்த போட்டோவை உனது தாயிடம் காண்பித்து பார்
உன்னை 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்ததற்கு
நீ எனக்கு செய்த மகத்தான சேவையாட இது என்பாள்
RSS BJP சங்கீகளே
தேச விரோதி அமித்ஷா வே நாட்டின் நயவஞ்சக மோடியே
இன்ஷா அல்லஹ்
உன்மீதும் உன் கூட்டத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இரங்கட்டுமாக
ஆமீன்
இந்த செயல்
பெரும்பாலான தாய் மார்களின் சாபம் வரும் முன் நீ திருந்திவிடு
Sura Yaseen 26 to
قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக" என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."
(அல்குர்ஆன்: 36:26)
இவ்வசனத்தில் (36:26) ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்'' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.
அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்பது இவ்வசனம் கூறும் கருத்து.
கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.
இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்துப் பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர். (நூல்: முஸ்லிம் 3834)
"என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்" (என்பதை).
(அல்குர்ஆன்: 36:27)
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
(அல்குர்ஆன்: 36:28)
اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
(அல்குர்ஆன்: 36:29)
ஹாமிதூன் : அழிந்து போனார்கள்
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
(அல்குர்ஆன்: 36:30)
"அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
(அல்குர்ஆன்: 36:31)
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
(அல்குர்ஆன்: 36:32)
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:33)
وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
(அல்குர்ஆன்: 36:34)
لِيَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَـتْهُ اَيْدِيْهِمْ ؕ اَفَلَا يَشْكُرُوْنَ
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
(அல்குர்ஆன்: 36:35)
سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
(அல்குர்ஆன்: 36:36)
وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:37)
Saturday, 29 February 2020
எனக்கு அராபிய நாட்டில் குடியுரிமை வாங்கி தர முடியுமா?”// என்று செல்வம் யாதவ் என்ற ஒரு நண்பர்
நண்பரே ! நான் பஹ்ரைன் நாட்டில் கடந்த42 ஆண்டுகளாக வசித்து வருபவன், உங்களுடைய இந்த கேள்விக்கு நான் வசிக்கும் இந்த இஸ்லாமிய நாட்டை வைத்து உங்களுக்கு உதாரணம் காட்ட முடியும். நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை இங்கு வசிக்கும் என் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் சாட்சி கூறுவார்கள்.
பஹ்ரைன் நாட்டு பிரஜைகளாக மாறிய எண்ணற்ற இந்து சகோதரர்களை இங்கு நாம் காண முடியும். அரபு நாட்டவர் 15 ஆண்டுகள், மற்றும் அரபு மொழியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் 25 ஆண்டுகாலம் இங்கு வசித்தால் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.
கேவல்ராம், பாட்டியா, கஜ்ரியா, சோனி (குஜராத்தி பொற்கொல்லர் வகுப்பினர்) போன்ற குடும்பத்தினர், ஹிந்து தட்டாய் சமூகத்தைச் சேர்ந்த இங்கு பலகாலமாக வசித்து வரும் இன்னும் பல குடும்பத்தினர் இங்கு பஹ்ரைன் பிரஜைகளாக குடியுரிமை பெற்று அனைத்து சலுகைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பஹ்ரைன் கடவுச்சீட்டு பெற்ற பாகிஸ்தானிய கிறித்துவர்கள், மற்றும் இந்திய தமிழர்களும் உண்டு.. குடியுரிமை விண்ணப்பித்து கிடைக்காத இந்திய முஸ்லீம்கள் உண்டு. குடியுரிமை பெற்ற இந்திய இந்துக்கள் உண்டு. இந்நாட்டு அரசாங்கம் மத பாகுபாடு பார்ப்பதில்லை.
இங்கு நிரந்தர குடியுரிமை பெற்ற கேரளம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இதைப் படிக்கும் இங்குள்ள தமிழன்பர்களுக்கு புரியும்)
நெடுஞ்சாலைகளில் அடுத்தடுத்து மசூதிகளும் உயர்ந்து எழுப்பப்பட்டிருக்கும் கிறித்துவ தேவாலயங்களும் காணலாம். இங்கு சுகி சிவம் அவர்கள் வந்தபோது "நோன்பு காலங்களில் இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் ஒளிந்து ஒளிந்து கழிவறையில் மறைந்துதான் உணவருந்த வேண்டும் என்று ஒரு பிரசங்கத்தில் கூறினீர்களே, இங்குள்ள இந்து முஸ்லிம் ஒற்றுமையை பாருங்கள். இதுதான் இங்குள்ள உண்மை நிலை" என்று விளக்கிச் சொன்னேன். "எனக்கு தரப்பட்ட தவறான தகவல் அது. அதற்காக வருந்துகிறேன்" என்று உயர்ந்த மனப்பான்மையோடு அவர் கூறியது மகிழ்வைத் தந்தது.
ஐயப்பன் கோயில் (மூன்று), ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் (5 பிரிவுகள்), குருவாயூரப்பன் கோயில் (இரண்டு), ஆஞ்சநேயர் கோயில், காளி கோயில், ஷிர்டி சாய்பாபா கோயில், புட்டபர்த்தி சாய்பாபா கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில் (இரண்டு), குருத்வாரா சீக்கிய கோயில் (இரண்டு) உள்ளன, 200 வருட பிரமாண்டமான கிருஷ்ணன் கோயில் இங்குள்ள முன்னால் அரசர் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதுபோல்தான் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 2008 முதல் 2013 வரை பஹ்ரைன் நாட்டின் அமெரிக்கத் தூதராக இருந்தவர் ஹுதா நூனூ. இவர் ஒரு யூதப் பெண்மணி. அதனைத் தொடர்ந்து 2013 முதல் தற்காலம் வரை பஹ்ரைன் நாட்டு அமெரிக்கத் தூதராக இருப்பவர் நான்ஸி கெதூரி. இவரும் யூதப் பெண்மணி. இங்கு யூதர்களின் வழிபாட்டுத்தளம் (Synogogue) இருக்கிறது. மற்றும் யூதர்களுக்கான அடக்கஸ்தலம் (கல்லறை). இந்துக்களுக்கான் எரி மயானம் உண்டு.
கிறித்துவ தேவாலயங்கள் ஏறக்குறைய 17 இருக்கிறது. கத்தோலிக், ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக், பெந்தேகொஸ்தே, Four Square Church இப்படி எல்லா பிரிவினர்களுக்கும் தேவாலயங்கள் தனித்தனியாக உள்ளன, தமிழில் உபதேசங்கள் நடைபெறும் வழிபாட்டுத்தலங்கள் மாத்திரம் சுமார் 6 உள்ளன,
முஸ்லீம் பெண்மணிகள் என்றாலே பிற்போக்கானவர்கள் என்ற ஒர் அபிப்பிராயம் பொதுவாகவே நிலவுகிறது. இங்கு கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 293 வேட்பாளர்களில் 41 வேட்பாளர்கள் பெண்கள்.
பஹ்ரைன் நாடு வெறும் 765.3 சதுர கிலோ மீட்டர் கொண்ட மிகச் சிறிய குட்டி நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(இப்பதிவு நண்பர் Rajini Arupathy அவர்களின் வேண்டுகோளின்படி உண்மையை உரக்கக் கூற எழுதப்பட்டது)
#அப்துல்கையூம்
உங்கள் நன்பனான AS