Monday, 24 February 2020

சூரா யாஸீன் விளக்கம்

சூரா யாஸீன் விளக்கம் 

சூரா யாஸீன் 83 வசனங்களை கொண்டது. இதில் மூன்று வகையான செய்திகள் கூறப்படுகின்றது.ஒன்று மரணத்திற்கு பின்பு உயிர்பித்தலை ஈமான் கொள்ளுதல் இரண்டாவது ஒரு கிராமவாசிகளின் வரலாற்று செய்திகள் மூன்றாவது இறைவனின் ஏகத்துவத்தை பிரதிபலிக்கும் செய்திகள்.

இந்த அத்தியாயத்தின் வசனம் ஆரம்பிக்கப்படும் போதே இறைவன் குர்ஆன் மீது சத்தியமிட்டு நபியே! நீர் இறைத்தூதர்களில் ஒருவர்தான் என்று கூறுகின்றான். ஏன் இந்த செய்தியை ஆரம்பமாக கூறுகின்றான் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பட்டபோது குறிகாரர், சூனியம் செய்பவர் ,பைத்தியக்காரர், என்றும் உன்னை தவிர வேறு நபரை நபியாக அனுப்புவதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இப்படி பல்வேறு விமர்சனங்களை மக்கள் முன் வைக்கின்றபோது இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இறைவன் இப்படி வசனத்தை ஆரம்பிக்கின்றான்.

ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.நேரான பாதை மீது (இருக்கின்றீர்). அல்குர்ஆன் 36 : 2-4

அடுத்த வசனமாக நபியின் முன் வைக்கப்பட்ட விமர்சனம் நீர் அழைக்கும் கொள்கை தவறானது நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இருக்கின்ற மார்க்கமே சிறந்தது என்று கூறியதற்கு இறைவனின் பதிலடியாகும். உங்களில் மரணித்தவர்களையும் அவர்கள் முற்படுத்தியதையும், விட்டு சென்றதையும் விளக்கமான ஏட்டில் நாம் பதிந்தே வைத்துள்ளோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வுலகில் மனிதன் செய்யும் சிறிய மற்றும் பெரிய விசயங்களும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன. பனிரெண்டாம் வசனம் இறங்குவதற்கு இந்த சம்பவமும் ஓர் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அதுஉண்மையா) என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார்  ஆம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்;
உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும் என்று (இரு முறை) கூறினார்கள். நூல் : முஸ்லிம்

பதி மூன்றாம் வசனத்தில் ஓர் கிராமத்ததையும் இந்த கிராமத்திற்கு அனுப்பட்ட மூன்று இறைதூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கின்ற போது அதை நிராகரித்து விடுகின்றர். அந்த ஓரை சார்ந்த ஓர் ஏழை மனிதர் இந்த இறைத்தூதார்கள் கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறியும் அந்த மனிதரை அடித்து கொலை செய்து விட்டனர். ஆனால் அல்லாஹ் அவருக்கு உயரிய சுவனத்தை கொடுத்த அதில் நுழைந்து விடு என்று கூறுகின்றான். இறந்த பிறகும் என் சமூகம் என் இறைவன் வழங்கிய சிறப்புகளை அறிந்துக் கொள்ள வேண்டுமே என்று தன் கவலையை வெளிப்படுத்துகின்றார். எனவே அழைப்பு செய்பவர்களுக்கு இதில் பல்வேறு படிப்பினைகள் உள்ளது. ஐம்பத்தி ஒன்றாம் வசனத்தில் சூர் ஊதபட்ட உடன் அனைவரும் தங்கள் சமாதிகளிலிருந்து எழுந்திருத்து எங்களை எழுப்பியவர்கள் யார்? என்று கேட்பார்கள் . ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். அல்குர்ஆன் 39 : 68

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். நூல் : புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்)  மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்காளகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம் எனும் (திருக்குர்ஆன் 21:104 வது இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு அறிந்துகொள்ளுங்கள்; மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். நூல் : புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்றுதிரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும் இரவில் ஓய்வெடுக்கும் போதும் காலை நேரத்தை அடையும்போதும் மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும். நூல் : புகாரி

இந்த சூராவை இறந்தவர்களுக்கு தான் ஓத வேண்டும் என்று பலர் நினைத்து ஓதுவதை பார்க்கின்றோம் தவறுதலான புரிதலே இதற்கு காரணமாகும்.  (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. அல்குர்ஆன் 36 : 70

ஆதாரமற்ற சூரத்துல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்

யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது. இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

திருக்குர் ஆனின் இதயம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான். நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)

இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்.

திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்

சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் "அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்" என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது. இப்படியே யாஸீன் சூரா சம்பந்தபடுத்தி வரும் பல செய்திகள் ஆதாரமற்றதாகவே உள்ளது.

எனவே இந்த அத்தியாயத்தை படித்து அதில் உள்ள படிப்பினைகள உணர்ந்து செயல்படுவோம்..



உங்கள் நன்பனான AS

Sunday, 23 February 2020

RSS IN முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் அமைப்பின் மானில தலைவா்(இப்ப தெறியுதா இவா் யாா் என்று)

RSS IN முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் அமைப்பின் மானில தலைவா்(இப்ப தெறியுதா இவா் யாா் என்று)

Saturday, 22 February 2020

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:

2019 இந்திய தேர்தலை மனதில் வைத்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த மோடிக்கு எப்படி மிகப்பெரிய வரவேற்பை டிரம்ப் கொடுத்தாரோ, அதுபோல வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறுகிற தேர்தலை ஒட்டி இந்தியாவிற்கு பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் வருகை தரவிருக்கிற டிரம்புக்கு சுமார் 70 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கான பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாட்டை இந்திய அரசு செய்ய இருக்கிறது.

அவரின் வருகையின் போது உலகத்திலேயே பெரிய விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து மாநாட்டில் பேச போகிறார் என்கிற செய்தி மட்டுமே இந்தியர்களின் காதில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விசயமான இந்தியாவின் விவசாய மற்றும் பால் உற்பத்தி துறையில் அமெரிக்காவின் பாராசூர நிறுவனங்களை எந்தவித வரியும் இல்லாமல் அனுமதிக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாக இருக்கிறது என்பதை சொல்ல மறுக்கிறார்கள்.

கடந்த வருடம் 2019 அக்டோபர் மாதம் பிராந்திய ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, இலங்கை, ஜப்பான், நீயூசிலாந்து மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership -RCEP) என்ற ஒன்றை உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடும் ஏற்பாடு என்று இந்திய விவாயிகள் தொழில் வல்லுநர்கள், தமிழகத்தில் மே 17 இயக்கம் நவம்பர் 02ஆம் தேதி இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடக்கூடாதென்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாத மோடி அரசு, மேற்ச்சொன்ன கூட்டமைப்போடு பல கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஈடுபட்டது. நவம்பர் 04'2019 அன்று நடந்த கடைசி கூட்டத்தில் நரேந்திர மோடி அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தீடிரென்று அறிவித்தார். அதற்கு பிஜேபி சொன்ன காரணம் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்டால் இந்தியாவின் உள்நாட்டு தொழில்கள் குறிப்பாக பால் வியாபாரம் மற்றும் துணி உற்பத்தி மிகப்பெரிய பாதிப்படையும் என்றும் மேலும் இதனை நம்பியிருக்கிற தொழிலாளார்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமென்றும் சொல்லித்தான் அந்த ஒப்பந்தத்தில் இறுதி நிமிடத்தில் கையெழுத்திடாமல் வெளியேறியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பேர் சொல்லும்போது கேட்காத மோடி தீடிரென்று விலகியது ஏன் என்பது அப்போது மர்மமாக இருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.

அதாவது இந்தியாவின் உள்நாட்டு சந்தையை அமெரிக்காவுக்கு தாரை வார்க்கவே மோடி கடைசி நேரத்தில் அப்போது அந்த கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியிலும் சரி, பால் பொருட்கள் உற்பத்தியிலும் சரி 19% பூர்த்தி செய்கிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 42ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது.சுமார் 10கோடி பேர் பலனடைகிறார்கள். இப்படிப்பட்ட மிகப்பெரிய சந்தையை அமெரிக்காவுக்கு எழுதிக்கொடுக்கும் ஒப்பந்ததில் கையெழுத்திடத்தான் டிரம்ப் இந்தியா வருகிறார்.

இது இல்லாமல் இறைச்சி மற்றும் பழங்கள் (ப்ளுபெர்ரி, செர்ரி) சோயபீன் கோதுமை போன்ற அமெரிக்க விவசாய பொருட்களுக்கான வரியை 100%திலிருந்து 10% குறைக்கும் ஒப்பந்தத்திலும் மோடியும் டிரம்பும் கையெழுத்திட இருக்கிறார்கள். அமெரிக்காவின் நலனுக்காக இந்தியாவின் 10கோடிக்கும் அதிகமான பேரை கொல்ல துணிந்திருக்கிறது மோடி அரசு.

எப்போது பார்த்தாலும் தேசபக்தி, தேசம் என்று பிதற்றும் பிஜேபி கும்பலின் தேசபக்தி என்பது இதுதான் என்பதை சாமானியர்கள் இப்போதாவது புரிந்துகொண்டு மோடி டிரம்ப் சந்திப்பை எதிர்க்க வேண்டும். இல்லையேல் மொத்த இந்தியாவையும் அமெரிக்காவுக்கு விற்றுவிட்டு இந்த கூட்டம் குளிர்காயும் இது என்ன மோடி கும்பலின் அப்பன் வீட்டு சொத்தா கவலைப்பட...

குறிப்புகள்:

1.https://www.indiatoday.in/india/story/modi-govt-dairy-chicken-us-elusive-trade-deal-donald-trump-1646320-2020-02-14

2.https://www.livemint.com/politics/policy/india-offers-us-dairy-chicken-access-in-bid-for-a-trade-deal-with-trump-11581650603957.html

3.https://www.dtnext.in/News/Business/2020/02/14234941/1215248/Modi-offers-to-open-up-dairy-poultry-markets-for-Trump.vpf

மே 17 இயக்கம்
9884072010


உங்கள் நன்பனான AS

Dr Monmohan Singh

https://tamil.oneindia.com/news/delhi/bharat-mata-ki-jai-slogan-being-misused-to-construct-militan-manmohan-singh-377819.html


உங்கள் நன்பனான AS

*India Collapsing

*India Collapsing*

*While everyone is busy debating on*
*India-Pakistan*
*370-Kashmir*
*Hindu-Muslim*
*CAA, NRC, NPR, etc*
*shaheen bagh*

*We miss to notice what's happening to INDIA*

*India - Recent data & Situation*

*External Debt of India* *500 + Billion Dollars.*

*Vodafone* is in loss of ₹50,000 Crore.

*Airtel* is in loss of ₹23,000 Crore.

*BSNL* is in loss of ₹14,000 Crore.

*MTNL* is in loss of ₹755 Crore.

*BPCL* is in loss of ₹750 Crore.

*SAIL* is in loss of ₹286 Crore.

*AIR India* is in loss of ₹4600 Crore.

*Spice Jet* is in loss of ₹463 Crore.

*Indigo* is in loss of ₹1062 Crore.

*BHEL* is in loss of ₹219 Crore.

*India Post* is in loss of ₹15,000 Crore.

*GMR Infra* is in loss of ₹561 Crore.

*YES Bank* is in loss of ₹600 Crore.

*Union Bank* is in loss of ₹1190 Crore.

*PNB Bank* is in loss of ₹4750 Crore।

*Axis Bank* is in loss of ₹112 Crore.

*J P Group finished*

*Videocon bankrupt*

*Aircel & Docomo is dead*

*Tata Docomo perished*

*Jet Airways closed*

*Airports Sold*
5 airports sold to Adani.

*Railways are on sale*

*Heritage Renting*
Heritages including Red Fort

*Nationalized Banks Merger*
Many nationalized banks have merged, many branches have literally closed,

*ATM Rooms*
Huge numbers of ATM Rooms are set down,

*All Banks*
incurring huge losses.

*36 largest debtors*
missing from country.

*Few Corporates*
Rs 2.4 lakh crores loan waived off

*BSNL*
54,000 may cut more jobs.

*Auto Industry*
1 million to be laid off

*Maruti*
Largest car maker cuts production.

*Car Inventory*
Rs 55000 crores car inventory lying at factories, with no buyers.

*Houses Unsold*
12.76 lakhs houses unsold in 30 major cities.

*Builders Suicide*
All over stressed. Some committing suicide, no buyers. Construction Stopped due Mat cost rise (GST at 18% to 28%).

*CCD founder*
*V G Siddhartha committed Sucide*
due to huge debt.

*HAL*
No money to pay salary for employees.

*ONGC*
Most profitable company in India is now making losses.

*OFB*
Under corporatization affecting over 1.5 lac employee & families.

*Biscuits Companies*
like Parle-G on the verge of terminating it's employees.

*Unemployment*
Millions unemployed due to Demonetization.

*Highest unemployment in 45 years*

*Domestic Stagflation*
Highest recorded

*Leaving India*
Record HNI individuals leaving India.

*May be many more...*

*Nothing is shown in media. Media is busy debating India Vs Pakistan, and Hindu Vs Muslims who were living peacefully with tranquility till recently.*

*It's our duty to let all others know the real picture.*


உங்கள் நன்பனான AS

CAA act means

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க,

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க, அவா சொந்தபந்தமெல்லாம் சங்கி சர்க்கில் தான். சென்னையில் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு கிளார்க்கா வேலைக்கு போனாங்க மாமி. கம்பெனி ஓனர் இளையான்குடி பக்கம் புதூரை சேர்ந்த மசூத் அலி. ஏற்கெனவே திருமணமாகி புள்ள குட்டிகளோட இருந்தவர்.

ஷரியத் சட்டப்படி மாமியை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டார். மாமியும் சத்தியா என்ற பெயரை பாத்திமா அலி என்று மாற்றிக் கொண்டார். இதனால் மசூதின் முதல்மனைவி இவரை விட்டு விலகிவிட்டார்.

மாமி வெறும் பெயர் மாற்றம் தான் செஞ்சுட்டார் போல, மனசு முழுக்க பழைய காவிதான். மாமியின் சொந்த பந்தத்தில் உள்ள சங்கிகள்,
முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் மூலம் நடத்தப்படும் ''முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்'' என்ற அமைப்பிற்கு இந்த மைலாப்பூர் மாமியை பொறுப்பாளராக நியமித்து விட்டார்கள்.

மாமிக்கு ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, ஆளுங்கட்சி வட்டாரத்திலும் அதிகார மட்டத்திலும் செல்வாக்கு அதிகம். சமுதாய வியாபாரம் செய்யும் சில முஸ்லிம் புரோக்கர் பயல்களின் சப்போர்ட்டும் மாமிக்கு உண்டு..

வில்லங்க விவகாரங்களை ஈசியாக முடித்துக் கொடுப்பதால்...
மண்ணடியில் இருந்து, செம்மரம் பவுடர் போன்ற ரெண்டாநம்பர்ல சம்பாரிச்சு இன்னைக்கு ஈசிஆரில் சொகுசு பங்களா கட்டி செட்டிலான பாய்கள டார்கெட் வெச்சு இந்த முஸ்லிம் ராஷ்டிரிய ம்ஞ்சில் சேர்த்திட்டு இருக்காங்க.

இன்றைக்கு ஆளும் பாஜக அரசே முஸ்லிம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில், முஸ்லிம்களின் சார்பாக பேசுகிறேன் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸின் குரலாக பேசிவருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கும்பலால் திட்டமிட்டு களமிறங்கப்பட்டு, மீடியாக்கள் மூலம் புரமோட் செய்யப்படும் பாத்திமா அலி என்ற பெயரில் வரும் சத்தியா மற்றும் அவர் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..

Friday, 21 February 2020

கேள்வியான.? ஒரு வேள்வி

கேள்வியான.? ஒரு வேள்வி

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை (22.02.20) இரவு 10.30 மணிக்கு

பேரா.ஜவாஹிருல்லா,தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி அவர்களுடன் நேர்காணல்...

https://www.facebook.com/243228229155092/posts/1924175614393670/


உங்கள் நன்பனான AS

முறையீடு

* முறையீடு *

கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி NPR தொடங்கப் போவதால், CAA / NRC / NPR க்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் இந்த இயக்கத்தை உயிரோடு வைத்திருக்கின்றன, இப்போது NPR ஐ புறக்கணிக்க / நிராகரிக்க சிறந்த வழி:

1. வக்கீல்கள், ஆர்வலர்கள் மஸ்ஜித் குழுக்கள், தலைவர்கள், உலேமா போன்றோரின் உதவியுடன் பல்வேறு குழுக்கள் பகுதி / வார்டு வாரியாக உருவாக்கப்பட வேண்டும்.

2. அணிகள் "தயவுசெய்து எந்த விவரங்களையும் கேட்க வேண்டாம், நாங்கள் NPR ஐ புறக்கணிக்கிறோம்" என்று குறிப்பிடும் எளிய A4 அளவு சுவரொட்டிகள் / அச்சுப்பொறிகளை உருவாக்க வேண்டும்.

3. அணிகள் வீடு வீடாகச் சென்று இந்த அச்சுப்பொறிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. இந்த சுவரொட்டிகளை தங்கள் கதவுகளில் / வாயில்களில் ஒட்டவும், எந்த விவரங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அணிகள் பொதுமக்களை நம்ப வைக்க வேண்டும்.

5. அணிகள் தங்கள் வார்டுகளில் முடிந்தவரை பல வீடுகளை 15-20 நாட்களில் மாலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் செலவிட்டால் மறைக்க முடியும்.

விவரங்களை எடுக்க வரும் அதிகாரிகள் பொதுவாக அரசு பள்ளி / கல்லூரி ஊழியர்கள். அந்த சுவரொட்டிகள் / அச்சுப்பொறிகளைப் பார்த்த பிறகு அவர்கள் விவரங்களுக்கு வற்புறுத்த மாட்டார்கள். அவர்கள் இன்னும் உங்கள் கதவைத் தட்டினால் அவர்களுடன் வன்முறையில் நடந்து கொள்ள வேண்டாம். ஒருவர் அவற்றை நிம்மதியாக நிராகரிக்க வேண்டும்.

மிக முக்கியமாக, எங்கள் பகுதிகள் / வார்டுகள் துறைகளாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் அந்த குறிப்பிட்ட துறைகளின் உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும், இதனால் எந்தவொரு அதிகாரியும் / காவல்துறையினரும் பொதுமக்களை வற்புறுத்தினால், அந்தத் துறையினரிடையே நாங்கள் எளிதாக செய்திகளைப் பரப்பலாம். NPR ஐ எதிர்க்கிறது. உள்நாட்டில் ஒருவருக்கொருவர் வலையமைப்பதற்கான சிறந்த வழி இது, மேலும் மக்கள் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க முடியும்.

இந்த எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்காததன் மூலம் பல காரணங்களுக்காக பாதுகாப்பாக விளையாட விரும்பும் பலர் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் பெரும்பான்மை புறக்கணிப்பு மற்றும் NPR ஐ நிராகரித்தால், அதன் முடிவை திரும்பப் பெற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். .

- வழக்கறிஞர் மொஹமட் தாஹிர்
அணுகல் சட்டம்


உங்கள் நன்பனான AS

Assauddin MP