Wednesday, 5 February 2020

பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார்


பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார்

    பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார் - வீடியோ

    டெல்லி: டெல்லியில் நடக்கும் ஷாகீன் பாக் போராட்டத்தில், பொய்யாக பர்தா அணிந்து உள்ளே சென்ற பெண் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கிருந்த பெண்களிடம் கையும் களவுமாக மாட்டிய வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

    டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

    இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    சி.ஏ.ஏ, என்.ஆர்.சி... முழுமையான பாஜக ஆதரவு நிலைப்பாடு.. பக்காவாக ட்யூனாகி விட்ட ரஜினிகாந்த்

    • அமைப்பு

      குலைக்க முயற்சி

      இந்த போராட்டத்தை குலைக்க பல அமைப்புகள் முயன்று வருகிறது. ஏற்கனவே கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் இந்த போராட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையே போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று குன்ஜா கபூர் என்ற பெண், ஷாகீன் போராட்டத்திற்குள் புகுந்து அங்கு கலவரம் ஏற்படுத்த முயன்று இருக்கிறார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பர்தா

      பர்தா அணிய முடிவு

      பர்தா அணிந்து சென்ற குன்ஜா கபூர், அங்கு பெண்களோடு பெண்களாக அமர்ந்து இருக்கிறார். தன்னுடைய உடைக்குள் கேமரா உள்ளிட்ட சில பொருட்களையும் அவர் மறைத்து வைத்துள்ளார். இவரின் நடத்தையை பார்த்து சந்தேகம் அடைந்த பெண்கள் அவரை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் கேமரா உள்ளிட்ட பொருட்களை வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    உங்கள் நன்பனான AS

    ஆர்.எஸ்.எஸ்ஸை "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" என்ற பட்டியலில் கூடிய விரைவில் சேர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை

    ஆர்.எஸ்.எஸ்ஸை "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" என்ற பட்டியலில் கூடிய விரைவில் சேர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை வைக்கும் petition ஐ பிரபல தெற்காசிய விவகார ஆய்வாளர் பீட்டர் ப்ரீட்ரிச் துவக்கியுள்ளார். துவக்கப்பட்டது முதல் வைரலாகி வரும் இந்த பெட்டிஷனில் உங்களுக்கும் உடன்பாடு இருந்தால் இதை கையெழுத்திட்டு மற்றவருடனும் பகிருங்கள். http://bit.ly/36VmkkL

    உங்கள் நன்பனான AS

    Tuesday, 4 February 2020

    டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்துத்துவா பயங்கரவாதி (ராம்பக்த்) கோபால் சர்மாவை சிறார் குற்றவாளி

    டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்துத்துவா பயங்கரவாதி (ராம்பக்த்) கோபால் சர்மாவை சிறார் குற்றவாளி என்று சித்தரித்து #கோபால்_சர்மா_தீவிரவாதியை #தண்டனையில்_இருந்து_காப்பாற்ற_முயற்சி_செய்யப்படுகிறது.. ஆனால் அவன் 2019 தேர்தலில் உத்திரபிரதேச த்தில் ஓட்டு போட்டுள்ளான்..
    ஓட்டு போடும் வயதில் உள்ள பயங்கிரவாதி கோபால் சர்மா சிறுவனா??இது இந்திய சட்டங்களை கேலிக் கூத்தாக்கி உள்ளது

    கடந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது.

    கடந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்....

    என் பெரிய குழந்தை வயது இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, 11. காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 &6 ஆம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம், 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய். இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு "மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்" விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு "தற்காலிக விசாரணை ரூம்" என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ஜட்ஜ் அய்யா விடுப்பில் இருக்கிறார்.

    "அம்மா எங்கு இருக்கிறார்" எனவும் இரவிலும் எழுந்து "நான் செய்தது தப்புதான், எனக்கு எதுவும் வேண்டாம் என் அம்மா மட்டும் போதும்" என அரற்றியவாறு கொடும் நாட்களை உற்றார் தூரத்தில் இருப்பதால் வீடு வாடகைக்கு கொடுத்த அந்த பெரிய மனதுக்காரரின் வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் அழுகுரலுக்கு இந்த நாகரிக சமூகத்தில் எங்கே இருக்கிறது பதில்?

    செய்த குற்றம் தான் என்ன? அக்குழந்தைகள் அப்பள்ளியில் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த நாடகத்தில் அக்குழந்தை பேசிய வசனமே இந்நிலையை குழந்தைக்கு தருவித்து இருக்கிறது. அந்த வசனம், "ஆவணங்கள் எங்கே என கேட்பவரிடம், செருப்பை காட்டுவோம்" என்பதுதான். இப்போது புரிந்திருக்குமே உங்களுக்கு. இது தேசவிரோத செயல் என "சமூக செயற்பாட்டாளர்" ஒருவர் காவல்துறையில் முறையிட கர்நாடக மாநிலம் பிடார் மாவட்ட காவல்துறை நிர்வாகம் விரைந்து செயல்பட்டு உள்ளது. ஆம், விரைந்து உடனே பள்ளிக்கு சென்று அக்குழந்தையை விசாரணை செய்ய, ஆம் நான்தான் சொன்னேன், என் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் என அக்குழந்தை சொல்ல, பின் நடந்தது எல்லாம் தான் நீங்கள் முன்பு படித்தது. இதில் சோகம் என்னவென்றால், "ஏன் தப்பா" என அக்குழந்தை கேட்க, இல்லையா என போலீஸ் வினவ, "அப்படியென்றால் சாரி" என அக்குழந்தை சொல்லியும், "நீங்கள் பெரும் குற்றம் இழைத்திருக்கிறீர்கள், தேசத்தின் தலைமை சேவகரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள், CAA, NPR, NRC என்பவைக்கு எதிராக பேசி தேசத்துரோக செயலில் ஈடுபட்டு அக்குழந்தையின் தாயையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஜெயிலில் ஆக்கி தேசத்திற்கு நன்மை செய்திருக்கிறது காவல்துறை. இதுவரை சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை "ஐயாம் சாரி, ஐயாம் சாரி" என அரற்றியிருக்கிறது. இன்னும் அந்த தாயும், தலைமை ஆசிரியையும் ஜெயிலில்.

    "சாதாரண பாஷை புரிய வில்லை என்றால், துப்பாக்கி பாஷையில் பேசலாம்" என தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் பேசுகிறார். நாட்டின் மத்திய மந்திரி ஒருவர் தேசவிரோதிகளை என்ன செய்யலாம், என கேட்டு "துப்பாக்கி கொண்டு கொல்லலாம்" என பதில் வர புளங்காகிதம் அடைகிறார். அவரது இக்குரலுக்கு பின் அமைதியாய் போராடி வரும் ஷாஷீன் பாத் இஸ்லாமியப் பெண்கள் பகுதியில் ஜாமியா பல்கலைக்கு அருகே மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தபட்டிருக்கிறது, சில நபர்களால். "டுக்டே கேங்" கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம் என நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்ல, அன்று மாலை ஜே.என்.யூ பல்கலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர் ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. துர்காவாஹினி என்ற பெயரில் சென்ற ஆண்டும் அதற்கு முன்னரும் துர்கா பூஜையின் போது கையில் வாளுடன் பெண் குழந்தைகள் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். ஆனா, யோகி ஆதித்யநாத் தொடங்கி எவரும் கைது ஏன் வழக்கு கூட போடப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

    இது ஏதோ அந்தக் காலம் இல்லை, அம்மாநில இல்லை அம்மாவட்ட செய்தித்தாள் பதிப்பில் ஒரு பெட்டி செய்தியாய் வந்து எவர் கண்ணிலும் படாமல் போக. நான்கு நாட்களாய் டிவிட்டரில் வலம் வந்து, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் செய்திகளாக்கி, இதோ நேற்று என்.டி.டிவியில் பிரைம் டைம் செய்தியாகவும், தனது வலைத்தளத்தின் முகப்பு செய்தியாகவும் இட்டு இருக்கிறது. சமூக வலைத்தள காலத்தில் செய்திகள் வெகு விரைவாக திரும்ப திரும்ப கவனம் பெறும் வேளையில் பிடார் பள்ளி அந்த பெண் குழந்தை செய்ததாக சொல்லும் தவறை அவள் மன்னிப்பு கோரிவிட்டாளே என்றாவது இரங்கி மன்னித்து விடும் அரசு இன்று இருக்கிறதா என்ன? நீதிமன்றங்கள் இருக்கிறதா என்ன?

    காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் இடத்தில் எல்லாம் நாமன்றி வேறில்லை என அன்றே இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேச விரோத செயல் புரிந்திட்ட பாரதியின் வரிகளில் தான் மீண்டும் நாம் தஞ்சம் அடைய வேண்டி இருக்கிறது, "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்..."

    Ram Gopal

    _*🔵பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.*_ *✍🏻நக்கீரன் இதழ்*

    _*🔵பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.*_

    *✍🏻நக்கீரன் இதழ்*

    1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    2. இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

    3. இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    4. இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

    5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

    9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

    10. இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    11. இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

    12. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

    13. இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

    14. இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

    இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை.
    அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

    *👆🏽தமிழகம் முழுவதும் இந்த செய்தியை கொண்டு போக வேண்டும்...உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்...!*
    நன்றி: Thamizh Inian


    உங்கள் நன்பனான AS

    பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி

    "பாஜகவுக்கு ஒட்டு போடலைனா கற்பழிக்கப்படுவீர்கள், இதுவா உங்கள் தேர்தல் பிரச்சார செய்தி?" - பிரதமர் மோடிக்கு பெண்கள் அமைப்பினர் கடிதம்! கட்டாயம் படிக்க வேண்டிய கடிதம் !. ..வார்த்தைகள் கடுமையானதாக இருந்ததாலோ என்னவோ இது பெருமளவில் ஊடகங்களில் வெளிவரவில்லை. http://bit.ly/2GUI0Tw

    உங்கள் நன்பனான AS

    தகுதியில்லாதவர்களிடம் நிர்வாகம் தந்தால்

    தகுதியில்லாதவர்களிடம் நிர்வாகம் தந்தால்
    *************************
    ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
    .
    ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
    குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
    .
    குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
    ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
    .
    வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
    ''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
    .
    தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்..


    உங்கள் நன்பனான AS

    கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபி ஆதரவாளர்கள் கடல் வெள்ளம் போல் காட்சி அளித்த சம்பவம்

    கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபி ஆதரவாளர்கள் கடல் வெள்ளம் போல் காட்சி அளித்த சம்பவம் அகில உலகத்தையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது

    NLP- சுயமுன்னேற்றத்திற்கான சிறப்பு பயிற்சி முகாம்

    NLP- சுயமுன்னேற்றத்திற்கான சிறப்பு பயிற்சி முகாம்.
    (Registration Opens for *Batch 15*)

    NLP (Neuro Linguistic Programming) எனப்படும் நுட்பமானது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்முடைய நடத்தைகள் மற்றும் மனதை புதிய பரிமாணத்தில் மாற்றக்கூடிய தன்மை கொண்டது.

    *பயன்கள்:*
    ✳மன அழுத்தம், பயம், மனரீதியான பல்வேறு தடைகளை நீக்குதல்
    ✳மன நிம்மதி அடைதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், தன்னம்பிக்கை மேம்பாடு
    ✳கவனக்குவிப்பு, நினைவாற்றல், மனிதர்களுடன் பழகும் விதம், உணர்வு மேலாண்மை, விற்பனை, நிர்வாகத்திறமையை வளர்த்தல்
    ✳பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் வழிமுறைகள்

    *நாள்:*
    08.02.2020, சனிக்கிழமை

    *நேரம்:*
    காலை 9.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை

    *இடம்:*
    Maple Tree Hotels,
    வடபழனி, சென்னை 26

    *கட்டணம்:*
    ரூ.1900/- மட்டுமே (பயிற்சி குறிப்பேடுகள், சான்றிதழ், தேநீர், மதிய உணவு உட்பட)

    *பயிற்சியாளர்:*
    *Dr. ஹுஸைன் பாஷா*
    உளவியல் நிபுணர் | சர்வதேச பயிற்சியாளர்

    *முன்பதிவுக்கு*:
    73977 64966, 73977 33575

    *Testimonials / Glimpse of Previous Programs:*
    https://www.hunlp.com/p/testimonials-video.html

    *Registration Form:*
    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSffJrUWuB_1X5j0drub3E8ULCaorvesCFPrKvRRhpWYM1ALQw/viewform

    *Join our WhatsApp Group:*
    https://chat.whatsapp.com/EqYD9I5ZASR25SY24sqA9p

    *நிகழ்ச்சி ஏற்பாடு*:
    மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங்


    உங்கள் நன்பனான AS