Sunday 16 February 2014

அல்லாஹ்வுடைய 99 பெயர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Transliteration
Translation
1
Allah (الله)
The Greatest Name
2
Ar-Rahman (الرحمن)
The All-Compassionate
3
Ar-Rahim (الرحيم)
The All-Merciful
4
Al-Malik (الملك)
The Absolute Ruler
5
Al-Quddus (القدوس)
The Pure One
6
As-Salam (السلام)
The Source of Peace
7
Al-Mu'min (المؤمن)
The Inspirer of Faith
8
Al-Muhaymin (المهيمن)
The Guardian
9
Al-Aziz (العزيز)
The Victorious
10
Al-Jabbar (الجبار)
The Compeller
11
Al-Mutakabbir (المتكبر)
The Greatest
12
Al-Khaliq (الخالق)
The Creator
13
Al-Bari' (البارئ)
The Maker of Order
14
Al-Musawwir (المصور)
The Shaper of Beauty
15
Al-Ghaffar (الغفار)
The Forgiving
16
Al-Qahhar (القهار)
The Subduer
17
Al-Wahhab (الوهاب)
The Giver of All
18
Ar-Razzaq (الرزاق)
The Sustainer
19
Al-Fattah (الفتاح)
The Opener
20
Al-`Alim (العليم)
The Knower of All
21
Al-Qabid (القابض)
The Constrictor
22
Al-Basit (الباسط)
The Reliever
23
Al-Khafid (الخافض)
The Abaser
24
Ar-Rafi (الرافع)
The Exalter
25
Al-Mu'izz (المعز)
The Bestower of Honors
26
Al-Mudhill (المذل)
The Humiliator
27
As-Sami (السميع)
The Hearer of All
28
Al-Basir (البصير)
The Seer of All
29
Al-Hakam (الحكم)
The Judge
30
Al-`Adl (العدل)
The Just
31
Al-Latif (اللطيف)
The Subtle One
32
Al-Khabir (الخبير)
The All-Aware
33
Al-Halim (الحليم)
The Forebearing
34
Al-Azim (العظيم)
The Magnificent
35
Al-Ghafur (الغفور)
The Forgiver and Hider of Faults
36
Ash-Shakur (الشكور)
The Rewarder of Thankfulness
37
Al-Ali (العلى)
The Highest
38
Al-Kabir (الكبير)
The Greatest
39
Al-Hafiz (الحفيظ)
The Preserver
40
Al-Muqit (المقيت)
The Nourisher
41
Al-Hasib (الحسيب)
The Accounter
42
Al-Jalil (الجليل)
The Mighty
43
Al-Karim (الكريم)
The Generous
44
Ar-Raqib (الرقيب)
The Watchful One
45
Al-Mujib (المجيب)
The Responder to Prayer
46
Al-Wasi (الواسع)
The All-Comprehending
47
Al-Hakim (الحكيم)
The Perfectly Wise
48
Al-Wadud (الودود)
The Loving One
49
Al-Majid (المجيد)
The Majestic One
50
Al-Ba'ith (الباعث)
The Resurrector
51
Ash-Shahid (الشهيد)
The Witness
52
Al-Haqq (الحق)
The Truth
53
Al-Wakil (الوكيل)
The Trustee
54
Al-Qawiyy (القوى)
The Possessor of All Strength
55
Al-Matin (المتين)
The Forceful One
56
Al-Waliyy (الولى)
The Governor
57
Al-Hamid (الحميد)
The Praised One
58
Al-Muhsi (المحصى)
The Appraiser
59
Al-Mubdi' (المبدئ)
The Originator
60
Al-Mu'id (المعيد)
The Restorer
61
Al-Muhyi (المحيى)
The Giver of Life
62
Al-Mumit (المميت)
The Taker of Life
63
Al-Hayy (الحي)
The Ever Living One
64
Al-Qayyum (القيوم)
The Self-Existing One
65
Al-Wajid (الواجد)
The Finder
66
Al-Majid (الماجد)
The Glorious
67
Al-Wahid (الواحد)
The One, the All Inclusive, The Indivisible
68
As-Samad (الصمد)
The Satisfier of All Needs
69
Al-Qadir (القادر)
The All Powerful
70
Al-Muqtadir (المقتدر)
The Creator of All Power
71
Al-Muqaddim (المقدم)
The Expediter
72
Al-Mu'akhkhir (المؤخر)
The Delayer
73
Al-Awwal (الأول)
The First
74
Al-Akhir (الأخر)
The Last
75
Az-Zahir (الظاهر)
The Manifest One
76
Al-Batin (الباطن)
The Hidden One
77
Al-Wali (الوالي)
The Protecting Friend
78
Al-Muta'ali (المتعالي)
The Supreme One
79
Al-Barr (البر)
The Doer of Good
80
At-Tawwab (التواب)
The Guide to Repentance
81
Al-Muntaqim (المنتقم)
The Avenger
82
Al-'Afuww (العفو)
The Forgiver
83
Ar-Ra'uf (الرؤوف)
The Clement
84
Malik-al-Mulk (مالك الملك)
The Owner of All
85
Dhu-al-Jalal wa-al-Ikram (ذو الجلال و الإكرام)
The Lord of Majesty and Bounty
86
Al-Muqsit (المقسط)
The Equitable One
87
Al-Jami' (الجامع)
The Gatherer
88
Al-Ghani (الغنى)
The Rich One
89
Al-Mughni (المغنى)
The Enricher
90
Al-Mani'(المانع)
The Preventer of Harm
91
Ad-Darr (الضار)
The Creator of The Harmful
92
An-Nafi' (النافع)
The Creator of Good
93
An-Nur (النور)
The Light
94
Al-Hadi (الهادي)
The Guide
95
Al-Badi (البديع)
The Originator
96
Al-Baqi (الباقي)
The Everlasting One
97
Al-Warith (الوارث)
The Inheritor of All
98
Ar-Rashid (الرشيد)
The Righteous Teacher
99
As-Sabur (الصبور)
The Patient One

சீர்யலில் விதைக்கப்படும் வக்கிரங்களால் சிதைக்கப்படும் குடும்ப உறவுகள்,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகும் சமுதாயத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, ஒளிந்து சென்று பார்க்க வேண்டி இருந்த ஆபாச திரைப்படங்களை ஓட்டும் தியேட்டர்கள், ஊரைத் தாண்டி, தெருவைத் தாண்டி, உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்து விட்டது! 

சீர்யலில் விதைக்கப்படும் வக்கிரங்களால் சிதைக்கப்படும் குடும்ப உறவுகள், 

விளம்பரங்களில் விரிக்கப்படும் ஆபாச வலை!

விளையாட்டுக்களில் புகுத்தப்படும் ஆபாச உடை!

நடன நிகழ்ச்சிகளில் புகுத்தப்படும் வக்கிர அசைவுகள்!

செய்திகளைக்கூட ஆபாசமாக்கிய சாமியார்களின் சேட்டைகள்!

என நம் குழந்தைகள் பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகின்றார்கள் என ஆய்வு சொல்கிறது!

பருவ வயதை அடைவதற்குள் 16000 பாலியல் காட்சிகளையும் 20000 வன்முறைக் காட்சிகளையும் பார்த்து உருவாகும் சமுதாயத்திடம் பாலியல் வன்முறைகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

அதைத்தான் இன்றைக்கு நாடு சந்தித்துக் கொண்டுள்ளது!இந்தக் காரணங்களைக் கண்டறிந்து களையாத வரை இந்தக் காரியங்களை தடுக்க முடியாது!

இதற்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு சொல்கிறது!

’முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ என பெண்களின் ஆபாச உடைக்கு மட்டும் தடை போடவில்லை! ’பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ என ஆண்களின் கண்களுக்கும் திரை போடுகிறது!

தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் என தடுப்பதோடு, அந்நிய ஆண் பெண்ணோடு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்க சொல்கிறது! ஆண் பெண் உறவுகளை நெறிப்படுத்துகிறது! காமத்தை தூண்டும் கள் வெறி தவிர்க்க சொல்கிறது!


Sengis Khan

இஸ்லாம் பார்வையில் "பெரும் பாவங்கள்"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

Saturday 15 February 2014

காவி தீவிரவாதிகள் 10 பேர் பட்டியல் : மத்திய அரசு வெளியிட்டது...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இது குறித்து கூறுகையில், தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகியவற்றில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில்,குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ்ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார்...

அந்த 10 பேருடைய பெயர், விவரங்களையும் ஆர்.கே.சிங் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். மறைந்த சுனில் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ்ஸின்தேவாஸ் மற்றும் முவா இயக்கத்தில் 1990 முதல் 2003 வரை இருந்தவர். இவர் சம்ஜாவ்தா மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்.

தலைமறைவாக உள்ள சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சார இயக்கத்தில் 1990 முதல் 2006 வரை இருந்தவர். இவர் இன்டோரை சேர்ந்தவர். ஜம்முதாவி, மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ்ஸின் கர்யவஹாக் அமைப்பையும், சுவாமி அசேமானந்த் ஆர்.எஸ்.எஸ் வனவாசி கல்யான் இயக்கத்தையும், ராஜேந்தர் என்கிற சமுந்தர் ஆர்.எஸ்.எஸ். சின் வர்க் விசாரக் அமைப்பையும் சேர்ந்தவர்கள்.

மேலும் குஜராத்தை சேர்ந்த முகேஷ் வசானி கோத்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தேவேந்தர் குப்தா ஆர்.எஸ்.எஸ். சின் பிரச்சாரக் அமைப்பையும், சந்திரசேகர் லெவே ஆர்.எஸ்.எஸ் சின் பிரச்சாரக் 2007 இயக்கத்தையும், கமல் செளகான் பிரச்சாரக்கின் கிளை இயக்கத்தையும், தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்ரா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த 10 பேரும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக்குதல்களில் ்ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க மற்றும் கிளை உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.