Saturday 25 May 2019

பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

*அபுதாபி மண்டல தமுமுக சார்பில் நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சி*

இறைவனின் மாபெரும் கிருபையால் அபுதாபி மண்டல தமுமுக சார்பில் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான இப்தார் நிகழ்ச்சி 25/05/2019 சனிக்கிழமையன்று மண்டலத் தலைவர் அபுல்ஹசன் தலைமையில் முஸாபா மேஜிக் செப் ரெஸ்டாரண்டில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக அமீரக தமுமுக - மமக தலைவர் அப்துல் ஹாதி அவர்களின் மகனார் ஈஷா கிராஅத் ஓதினார்.
முஹம்மது பின் ஜாயித் சிட்டி கிளை தமுமுக - மமக தலைவர் முஹம்மது தெளஃபிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அல்டப்ரா கேம்ப் கிளை தமுமுக- மமக தலைவர் தலைவர் எமனை சர்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரகத் தமுமுக - மமக தலைவர் அப்துல் ஹாதி அவர்களும், அமீரகத் தமுமுக - மமக துணைத் தலைவர் A.S. இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினர்.

சனையா கிளை செயற்குழு உறுப்பினர் சித்திக் அவர்கள் என்னைக்கவர்ந்த தமுமுக என்ற தலைப்பில் தமுமுகவில் இணைந்ததால் மார்க்க விசயங்களை அறிந்து அதன் வழி நடக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த விசயத்தை நெகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி பேசினார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் அபுதாபி மண்டல தமுமுகவின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் அமீரகத் தமுமுக- மமக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம் அவர்களால் பத்து வகுப்புகள் நடைப்பெற்றது. இப்பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பேச்சாளர்களாக உருவான சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேச்சாளர் பயிற்சி முகாம் பயிற்சியாளர் A.S. இப்ராஹிம் அவர்களுக்கு பயிற்சிப்பெற்ற சகோதரர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

அபுதாபி மண்டல இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை IPP பொறுப்பாளர் தாஜிதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.

இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல அனைத்து கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்குக்கொண்டு சிறப்பித்தனர்.

இப்படிக்கு
தமுமுக ஊடகப்பிரிவு
அபுதாபி மண்டலம்.

No comments:

Post a Comment