Tuesday 25 June 2013

எதை மறக்க சொல்கிறாய்.- குஜராத்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிடவேண்டும்...!!!  - பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்க்.

எதை மறக்க சொல்கிறாய்...???
 
அண்ணன் தம்பியாக பழகிய மக்களை மதத்தின் பெயரால்
பிரித்தெடுத்து பதம் பார்த்தீர்களே அதையா..?? 
 
சகோதரனின் கண்முன் சகோதரியை
கணவனின் கண்முன் மனைவியை
மகனின் கண்முன் பெற்ற தாயை
நிர்வாணமாக்கி கூட்டாக வன்புனர்ந்தீர்களே அதையா...??

கருவுற்ற தாயின் அடிவயிற்றை கிழித்து
உலகை பார்த்திராத பச்சிளம் சிசுவை
கூர்வாளால் வெட்டி வீசியதே
காவி கொலைவெறி கூட்டம் அதையா..???

வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை
எனக்கருதி வீட்டினுள் கூட்டாக அடைந்திருந்த
மக்களை தயவு தாட்சண்யம் இன்றி
வீட்டோடு தீவைத்து கொளுத்திநீர்களே அதையா...???

பாராளுமன்ற MP இஹ்சான் ஜாப்ரி, அவர் வீடு பாதுகாப்பாய்
இருக்குமென நம்பி ஒரு ஊரே அந்த வீட்டினுள்
தஞ்சம் புகுந்தபோது அதன் கதவுகளை உடைத்து
அவரை தர தரவென இழுத்து அம்மணமாக்கி
கண்டம் துண்டமாக வெட்டி கொன்றீர்களே அதையா...???

தண்ணீரால் நிரம்பியிருக்க வேண்டிய குஜார்த்தின் குளங்கள்... முஸ்லிம்களின் செந்நீரால் நிரம்பி வழிந்ததே அதையா...???

மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறக்கவே மாட்டான்...நீங்கள் செய்த மாபெரும் கொடுமைகளை...!!!

கருத்தாக்கம் அபு ரயான் !


Novshath
G-Tex,
Dammam
.

No comments:

Post a Comment