Tuesday 25 June 2013

அழிவுப் பாதையில் தொலைக்காட்சி சேனல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக அறிவியல் அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் திரைப்படங்களும் ஆடல் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.
ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் நடிகர்கள் நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) வேகமாக கற்றுத் தரமுடியும்.
காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் மது அருந்தாமல் விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?
திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக்கண்டு அஞ்சும் நிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் ஒரே ஒரு சண்டை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான்.
அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள்  செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப  தேசிய சர்டிபிகேட்,
சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் பணப் புயலும் நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி எண்ணை மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை.
அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர்.  கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்போன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்போன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு. ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன.
அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் வீடு வாசல் தர்மம் ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.
அன்புடன் 

அஷ்ரப்

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின்
சார்பில்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 400 மற்றும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு 

பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா
நாள்  29.06.2013
நேரம் காலை 9.30 மணி
இடம் ராஜா திருமண மகால், பரமக்குடி
           இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
--
ISLAMIC SOCIAL WELFARE TURST
9/175 KODIKAL KARAR STREET,
PARAMAKUDI TK
RAMANATHAPURAM DIST
PIN : 623 707
Cell : 9597418904, 9443190755
__._,_.___

1.jpg
2.jpg
3.jpg

4.jpg

எதை மறக்க சொல்கிறாய்.- குஜராத்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிடவேண்டும்...!!!  - பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்க்.

எதை மறக்க சொல்கிறாய்...???
 
அண்ணன் தம்பியாக பழகிய மக்களை மதத்தின் பெயரால்
பிரித்தெடுத்து பதம் பார்த்தீர்களே அதையா..?? 
 
சகோதரனின் கண்முன் சகோதரியை
கணவனின் கண்முன் மனைவியை
மகனின் கண்முன் பெற்ற தாயை
நிர்வாணமாக்கி கூட்டாக வன்புனர்ந்தீர்களே அதையா...??

கருவுற்ற தாயின் அடிவயிற்றை கிழித்து
உலகை பார்த்திராத பச்சிளம் சிசுவை
கூர்வாளால் வெட்டி வீசியதே
காவி கொலைவெறி கூட்டம் அதையா..???

வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை
எனக்கருதி வீட்டினுள் கூட்டாக அடைந்திருந்த
மக்களை தயவு தாட்சண்யம் இன்றி
வீட்டோடு தீவைத்து கொளுத்திநீர்களே அதையா...???

பாராளுமன்ற MP இஹ்சான் ஜாப்ரி, அவர் வீடு பாதுகாப்பாய்
இருக்குமென நம்பி ஒரு ஊரே அந்த வீட்டினுள்
தஞ்சம் புகுந்தபோது அதன் கதவுகளை உடைத்து
அவரை தர தரவென இழுத்து அம்மணமாக்கி
கண்டம் துண்டமாக வெட்டி கொன்றீர்களே அதையா...???

தண்ணீரால் நிரம்பியிருக்க வேண்டிய குஜார்த்தின் குளங்கள்... முஸ்லிம்களின் செந்நீரால் நிரம்பி வழிந்ததே அதையா...???

மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறக்கவே மாட்டான்...நீங்கள் செய்த மாபெரும் கொடுமைகளை...!!!

கருத்தாக்கம் அபு ரயான் !


Novshath
G-Tex,
Dammam
.

ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி (!!!!!!)

பத்திரிகைச் செய்தி! எந்த பத்திரிகைன்னு
உங்களுக்கே தெரியும்..

கேக்குரன் கேணயனா இருந்தா.. இப்படித்தான் சொல்வார்கள்...

இன்னோவா 80x7 =560பேர்
விமானம் 4x320= 1280பேர்
சொகுசு பஸ் 25x50=1250பேர்
 
எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் 5000 தான் தேறும்.
அதுவும் ராணுவ உதவியிடன், பாவம் ராணுவ வீரர்கள்
குஜராத் மக்களை மட்டும் கண்டி பிடுத்து காப்பாற்றினார்கள், அதுவும் மோடியின் தலைமையில்..
அப்ப ராணுவ கமெண்டர்கள் என்ன ஆனார்கள்?
இப்படி ஆயிரம் கேள்விகள்...

மீட்க வேண்டியவர்கள் இன்னும் 10 ஆயிரமா?
அல்லது 30 ஆயிரமா?

ஆமா இவ்வளவு செய்ததை யாரும்
ஒரு வீடியோ கூடவா எடுக்கல்ல...!!!

நன்றி : முஹம்மத் சைனுதீன் B
ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி ( ! )

பத்திரிகைச் செய்தி! எந்த பத்திரிகைன்னு 
உங்களுக்கே தெரியும்..

கேக்குரன் கேணயனா இருந்தா.. இப்படித்தான் சொல்வார்கள்...

இன்னோவா 80x7 =560பேர்
விமானம் 4x320= 1280பேர்
சொகுசு பஸ் 25x50=1250பேர்

எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் 5000 தான் தேறும். 
அதுவும் ராணுவ உதவியிடன், பாவம் ராணுவ
 வீரர்கள் 
குஜராத் மக்களை மட்டும் கண்டி பிடுத்து காப்பாற்றினார்கள், அதுவும் மோடியின் தலைமையில்.. 
அப்ப ராணுவ கமெண்டர்கள் என்ன ஆனார்கள்? 
இப்படி ஆயிரம் கேள்விகள்...

மீட்க வேண்டியவர்கள் இன்னும் 10 ஆயிரமா? 
அல்லது 30 ஆயிரமா?

ஆமா இவ்வளவு செய்ததை யாரும் 
ஒரு வீடியோ கூடவா எடுக்கல்ல...!!!

நன்றி : முஹம்மத் சைனுதீன் B