Sunday 29 July 2012

பர்மாவில் நாங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்,


பர்மாவில் நாங்கள் 

கொடூரமாய் கொலையுண்டு 
இன்னொருமுறை 
மண்ணிற்கு உரமாகியச் 
சமூகம்!

குருதியை முத்தமிடாத பூமி
உலக வரைபடத்தில் 
மிச்சமேதுமில்லை;  
குரல் கொடுக்க எவருமில்லை!

ஊடகம் ஊமையானது ஏனோ;
எங்கள்  உயிர்கள் மட்டும் 
உங்களுக்கு ஈனமானது ஏனோ;
உலக நாடுகள் 
அமைதிக் காப்பது ஏனோ;
கொடூரமாய் இறக்கும் 
எங்களுக்கு இது 
அமைதி அஞ்சலி தானோ! 
-
-யாசர் அரஃபாத்

No comments:

Post a Comment